கண்ணனுக்கு அடிபட்ட விஷயம் தெரிந்து பதறியடித்து ஓடி வருகிறார் தனம்.

Pandian Stores Episode Update 10.12.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர். கண்ணன் அடிபட்டு கிடந்ததைப் பார்த்த கதிர் ஜீவா அவனை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பிறகு கதிர் முல்லைக்கு போன் செய்து கண்ணனுக்கு அடிபட்டுவிட்டது நாங்கள் இப்போது மருத்துவமனையில் இருக்கிறோம். ஆனால் வீட்டில் இதையெல்லாம் எதுவும் சொல்லாத கண்ணனைப் பார்த்து விட்டோம் அவனை கூட்டிட்டு வரேன்னு மட்டும் சொல்லு கொஞ்சம் லேட்டாகும்னு சொல்லு என கூறுகிறார்.

ஸ்ரீ ரங்கம் சொர்க்க வாசல் திறப்பு : பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு

முல்லை வீட்டில் உள்ளவர்களிடம் அப்படியே சொல்கிறார். பிறகு மீனாவும் முல்லையும் ஐஸ்வர்யாவை சமாதானம் செய்கின்றனர். அதன் பிறகு மறுநாள் காலையில் ஜீவா பைக்கில் முன்னாடி வர பின்னாடி ஆட்டோவில் கதிரும் கண்ணனும் வருகின்றனர். கண்ணன் அடிபட்டு கை காலெல்லாம் கட்டுப்போட்டுக் கொண்டு வந்து இறங்கியதைப் பார்த்து அதிர்ச்சியடைகிறார் ஐஸ்வர்யா. பிறகு கண்ணனை உள்ளே அழைத்துச் சென்று அனைவரும் பதற்றத்தோடு என்னாச்சு என கேட்க ஜீவா நடந்த அனைத்து கதையை சொல்கிறார். மூர்த்தி உனக்கு ஏன்டா இந்த கோபம் என கதிரை திட்டுகிறார்.

பிறகு முல்லையிடம் கண்ணனுக்கு சாப்பிட ஏதாவது கொடு என கூறுகிறார். அதன்பிறகு கதிர் ஜீவாவிடம் மூர்த்தி கண்ணனுக்கு எதுவும் பிரச்சனை இல்லை என கேட்க அவர்கள் எதுவும் பிரச்சினை இல்லை என கூறுகின்றனர். இந்த விஷயத்தை உங்க அண்ணா கிட்ட சொல்லாதீங்க நானே நேரம் பார்த்து பக்குவமா சொல்லிக்கிறேன் என கூறுகிறார்.

ஆனால் கண்ணனை மருத்துவனையில் பார்த்த ஜகா அந்த விஷயத்தை வீட்டிற்கு சென்றதும் தனத்துடன் கூற அவர் பதறியடித்து வீட்டிற்கு ஓடி வந்து விடுகிறார். கைகால் தலை என உடல் முழுவதும் கட்டுடன் இருக்கும் கண்ணனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து அழுது புலம்புகிறார் தனம். என்னதான் நடந்துச்சு ஆக்சிடென்ட் ஏதாச்சு ஆச்சா என தனம் கேட்கிறார். பிறகு ஜீவா கண்ணனை கடையில் பணத்தை திருடிய பையன் ஆளை வைத்து அடித்து விட்டான் என கூறுகிறார். அவனை ரோட்டில் பார்க்கும்போது அவன் கண்ணனை பத்தி தப்பு தப்பா சொல்ல கதிர் ஒரு அடி அடித்து விட்டான் அதனால் தான் கண்ணனை அடுத்து பழி தீர்த்துக் கொண்டான் என கூறுகிறார். தனமும் உனக்கு ஏன்டா இவ்வளவு கோவம் வருது. ரோட்ல யாரோ என்னமோ பேசிட்டு போறாங்க. இப்ப பாரு நீ பண்ண வேலை எங்க கொண்டு வந்து நிறுத்தி இருக்கு என திட்டுகிறார்.

நிறைய Roles-லாம் நான் Avoid பண்ணேன் – Interview With Gurusomasundaram and Babu Thamizh.! 

பிறகு மூர்த்தி வந்ததும் யாருக்கும் என்கிட்ட இந்த விஷயத்தை சொல்லனும்னு தோணல இல்ல. அன்னிக்கு தெரிய வேணா அண்ணனுக்கு தெரிய வேணா தெரிந்த கஷ்டப்படுவாங்க நீங்களே ஒரு முடிவு எடுத்துக்கறீங்க, இப்போ நீங்களும் சொல்லல என மூர்த்தியுடன் சத்தம் போடுகிறார். எல்லாருக்கும் தெரிஞ்சு அதுக்கப்புறம் எனக்கு தெரியும் போது எவ்வளவு கஷ்டமா இருக்கு என அழுகிறார். கடைக்குப் போகும்போது உங்க வீட்டுக்கு வந்துட்டு நான் இதைச் சொல்லலாம் என்றுதான் இருந்தேன் அதான் ஜகா சொல்லிட்டான்ல விடு என மூர்த்தி கூறுகிறார். அதான் நீ வந்துட்டல கண்ணனை வீட்ல இருந்து பாத்துக்கோ என்ன சொல்லுகிறார். பிறகு மூர்த்தியும் ஜீவாவும் கடைக்கு கிளம்புகின்றனர். இத்துடன் இன்றைய பாண்டியன் ஸ்டோர் எபிசோட் முடிவடைகிறது.

இதனைத் தொடர்ந்து வெளியான புரோமோ வீடியோவில் கதிர் கண்ணனை அடித்தவர்களுடன் சண்டை போடுகிறார். ஒரு கட்டத்தில் கதிரை அரிவாளால் வெட்ட வருகின்றனர். இதனால் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.