சுந்தரவல்லி போடும் திட்டம், நந்தினி சொன்ன வார்த்தை, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.

இன்று வெளியான ப்ரோமோவில் சூர்யா நந்தினி இடம் ஒரு கையெழுத்துக்காக எதுக்கு இவ்வளவு பயப்படுற என்று கேட்க ஏதாவது தப்பா ஆகிடும் என்று பயமா இருக்கு என்று சொல்லுகிறார். மறுபக்கம் சுந்தரவல்லி நான் கையெழுத்து போடற இடத்துல அவ போடுவாளா அது ஒரு நாளும் என்னால ஏத்துக்க முடியாது நடக்கவும் விடமாட்டேன் என சொல்லுகிறார்.
மறுபக்கம் சுரேகாவிடம் எதுக்கெடுத்தாலும் நந்தினி நந்தினி என்று கூப்பிட்டு இருக்க உனக்கு சமைச்சு போட தான் அவங்க அம்மா அவள பெத்து போட்டாங்களா என்ற கேள்வி கேட்கிறார். என்ன நடக்கப் போகிறது என்று எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.
