விஜய்யிடம் கதை கூறிய அனுபவத்தை பகிர்ந்த மாறி செல்வராஜின் பேட்டி வைரல்.

தமிழ் சினிமாவில் பிரத்தியேகமான கதைகளை இயக்கி தனக்கென தனி இடம் பிடித்து முன்னணி இயக்குனராக இடம் பிடித்திருப்பவர் மாரி செல்வராஜ். பரியேறும் பெருமாள், கர்ணன் உள்ளிட்ட திரைப்படங்களை தொடர்ந்து இவரது இயக்கத்தில் உதயநிதி நடிப்பில் நேற்றைய தினம் மாமன்னன் திரைப்படம் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது.

ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிப்பில் ஏ ஆர் ரகுமான் இசையமைப்பில் வடிவேலு, கீர்த்தி சுரேஷ், பகத் பாஸில் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்த இப்படம் தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று திரையரங்குகளில் வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் நடிகர் விஜய்யிடம் கதை கூறியதாக இயக்குனர் மாரி செல்வராஜ் அளித்திருக்கும் சமீபத்திய பேட்டியின் தகவல் ஒன்று வைரலாகி வருகிறது.

அதில் அவர், தீவிரமான விஜய் ரசிகரான நான் அவரை சந்தித்தபோது ரசிகராக இல்லாமல் ஒரு இயக்குனராக எனது கதையை கூறினேன். அதனைக் கேட்ட பிறகு ஆச்சரியம் அடைந்த நடிகர் விஜய் ‘என்ன சார்’ என ரியாக்ஷன் கொடுத்ததாக அவர் கூறியிருக்கிறார். அதன் பிறகு நிச்சயம் இணைந்து படம் பண்ணுவோம் என்றும் மாறி செல்வராஜ் அப்பேட்டியில் தெரிவித்திருக்கிறார். இவரது இந்த தகவல் ரசிகர்களை உற்சாகமடைய செய்து வைரலாகி வருகின்றனர்.