அடுத்த பட அறிவிப்பு வரும் வரை சமூக வலைதளங்களில் இருந்து பிரேக் எடுப்பதாக லோகேஷ் தெரிவித்துள்ளார்.
தென்னிந்திய சினிமாவில் முன்னணி இயக்குனர்களின் ஒருவராக பலம் இருப்பவர் லோகேஷ் கனகராஜ். மாநகரம் படத்தில் மூலமாக இயக்குனர் ஆக அறிமுகமான இவர் அதன் பின்னர் தொடர்ந்து கைதி, மாஸ்டர், விக்ரம் என வெற்றி படங்களாக கொடுத்து வருகிறார்.
கமல் நடிப்பில் வெளியான விக்ரம் படத்தின் ஐம்பதாவது நாள் கொண்டாட்டம் சமீபத்தில் நடைபெற்றது. இந்த நிலையில் தற்போது லோகேஷ் கனகராஜ் தன்னுடைய twitter பக்கத்தில் பதிவு செய்துள்ள பதிவு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது தன்னுடைய அடுத்த படத்தின் அறிவிப்பு ஆழ்ந்த வரை அனைத்து சமூக வலைதள பக்கங்களில் இருந்து பிரேக் எடுப்பதாக தெரிவித்துள்ளார். அடுத்த பட அறிவிப்போடு உங்களை விரைவில் சந்திக்கிறேன் எனை தெரிவித்துள்ளார்.
லோகேஷ் கனகராஜின் இந்த அறிவிப்பு ரசிகர்களை கொஞ்சம் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.