அஜித்க்கு தேசிய விருது கிடைக்காதது வருத்தம்.. கே எஸ் ரவிக்குமார் பேச்சு.!!
அஜித்துக்கு தேசிய விருது கிடைக்காதது வருத்தம் என கே எஸ் ரவிக்குமார் பேசியுள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன் உடன் அஜித் இணைந்து நடிக்க உள்ளார் விரைவில் இந்த படத்தில் காண படப்பிடிப்பு தொடங்க இருக்கும் நிலையில் அஜித் தற்போது கார் ரேஸில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார்.
இந்த நிலையில் அஜித் நடிப்பில் வெளியான வரலாறு படம் குறித்து கே எஸ் ரவிக்குமார் பேசி இருப்பது தற்போது வெளியாகி உள்ளது அதாவது வரலாறு படத்தை தெலுங்குல பாலையாவை வைத்து ரீமேக் பண்ணலாம்னு இருந்தேன் அப்போ பாலையா வரலாறு படத்தை பார்த்துட்டு அஜித் போல என்னால் அந்த கதாபாத்திரத்தில் பண்ண முடியாது என்று சொல்லிவிட்டார். அஜித் அந்த கதாபாத்திரத்தை அவ்வளவு சூப்பரா பண்ணிருக்காரு நான் பண்ணாத கதாபாத்திரத்திற்கு உள்ள மரியாதையே போயிடும். அதை கெடுக்க வேண்டாம் என்று சொல்லியதாக கூறி இருக்கிறார்.
வரலாறு படத்துக்கு அஜித்துக்கு தேசிய விருது கிடைக்காதது எனக்கு வருத்தம் என்றும் கூறியுள்ளார். இவரின் இந்த பேச்சு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
