Ilayaraja lamp inThiruvannamalai sanctify
Ilayaraja lamp inThiruvannamalai sanctify

Ilayaraja lamp inThiruvannamalai sanctify : இந்திய சினிமாவின் பிரபல பாடகர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகத்தோடு வலம் வந்தவர் எஸ்.பி.பாலசுப்ரமணியம். இவர் கொரானா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு கிட்டத்தட்ட 52 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இவரது உடல் நேற்று சென்னையில் இருந்து தாமரைப்பாக்கம் கொண்டு செல்லப்பட்டு அவரது பார்ம் ஹவுஸில் நல்லடக்கம் செய்யப்பட்டது .

இவருடைய மறைவை திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திரைப் பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் அவருடைய மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இசையமைப்பாளர் இளையராஜா தனது நண்பனின் ஆத்மா சாந்தி அடைய எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்காக திருவண்ணாமலையில் மோட்ச தீபம் ஏற்றியுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.