வாழ்க்கையில் ஜெயிக்கணுமா இதை பண்ணுங்க.. நடிகை ரோஜா சொன்ன விஷயம்..!

வாழ்க்கையில் ஜெயிக்க என்ன செய்ய வேண்டும் என்று ரோஜா கூறியுள்ளார்.

செம்பருத்தி படத்தின் மூலம் அறிமுகமான இவர் சூரியன், உழைப்பாளி, இந்து, வீரா, ராஜமுத்திரை ,ஆயுத பூஜை, பரம்பரை ,தமிழ்செல்வன், உன்னிடத்தில் என்னை கொடுத்தேன், புதுமைப்பித்தன், சுயம்வரம், திருப்பதி ஏழுமலை வெங்கடேசா ,கூடி வாழ்ந்தால் கோடி நன்மை, கோட்டை மாரியம்மன் போன்ற எண்ணற்ற படங்களில் நடித்து 90sகளின் நாயகியாக வலம் வந்தவர் என்றே சொல்லலாம்.
இவர் இயக்குனர் ஆர் கே செல்வமணியை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் இருப்பது அனைவரும் அறிந்ததே. படங்களை தாண்டி ரோஜா தற்போது அரசியலில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார்.
சமீபத்தில் இவர் கணவர் குறித்து பேசியுள்ளார் அதாவது நான் நான்தான் எப்பவுமே சண்டை போடுவேன் என்றும் செல்வமணி சார் எப்பவுமே சண்டை போட மாட்டார் என்று கூறியுள்ளார் கோவம் வந்ததுன்னா சீரியஸா ரூமுக்குள்ள போய் கதவை மூடிபாரு கோவம் குறைஞ்சதுக்கு அப்புறம் வெளியே வருவாரு ஏன்னா அவர் திட்டினா நான் அழுதுருவேன் அதனால் தான் என்று கூறியுள்ளார் அப்புறம் அதுக்கு வேற சமாதானம் படுத்தனும் எதுக்குன்னு அவருக்கு தெரியும் இதனால் வாழ்க்கையில் ஜெயிக்கனும்னு நினைச்சா பொண்டாட்டி கிட்ட தோத்துப் போங்க பொண்டாட்டி கிட்ட சண்டை போட்டா வீட்டுல சண்டை போட்டுக்கிட்டே தான் இருக்கணும் வெளியே போய் ஜெயிக்க முடியாது என்று கூறியுள்ளார்.
இவரின் இந்த அட்வைஸ் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
