H Raja

புதுக்கோட்டை விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது காவல்துறை மற்றும் நீதிமன்றத்தை அவதூறாக பேசியதாக எச்.ராஜா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், இவ்வாறு அவதூறாக பேசியதாக வழக்கு பதிவு செய்து தொடரப்பட்ட வழக்கில், பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று ஆஜர் ஆனார்.

அங்கு உயர்நீதிமன்றம் குறித்து அவதூறாக பேசியதற்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார். மேலும், எச்.ராஜா கூறியதாவது, ” நான் என் தவறை உணர்ந்து விட்டேன். கோவம் மற்றும் உணர்ச்சிவசப்பட்டு அவ்வாறு பேசிவிட்டேன்” என கூறினார். ஆனால், முன்போ தான் அவ்வாறு பேசவில்லை என்றும், யாரோ எடிட் செய்திருக்கிறார்கள் என்றும் எச்.ராஜா தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.