எலக்ட்ரோபதி எனும் மாமருந்து: திரைப்பட இயக்குனர் நாஞ்சில் பி.சி.அன்பழகன் பேச்சு

‘சூப்பர் குட் பிலிம்ஸ்’ ஆர்.பி.சவுத்ரி தயாரிப்பில் முரளி நடித்த ‘காமராசு’ படத்தையும் மற்றும் அய்யா வழி, நதிகள் நனைவதில்லை போன்ற படங்களையும் இயக்கியவர் நாஞ்சில் பி.சி.அன்பழகன். இவர் அதிமுக நட்சத்திரப் பேச்சாளராகவும் உள்ளார்.

மேலும் ‘நாஞ்சில் ஆர்கானிக்’ என்ற நிறுவனத்தையும் நடத்தி வருகிறார் இந்நிறுவனம், மனிதகுலத்திற்கு மிகவும் இந்தியமையாத இயற்கையான உணவுகளை இயற்கையாகவே வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தா கேந்திராவில், கடந்த 25-ந்தேதி எலக்ட்ரோபதி மருத்துவக் கருத்தரங்கு நடைபெற்றது. இதனை காருண்யா மருத்துவக் கல்வி நிறுவனமானது AMCM (வரலாற்று இடம்-இத்தாலி) மற்றும் ஒருங்கிணைந்த மருத்துவ பட்டதாரிகள் கூட்டமைப்புடன் இணைந்து நடத்தியது.

காருண்யா மருத்துவக் கல்வி நிறுவனர் மருத்துவர் ஜெஸ்டின் ராஜ் கருத்தரங்கை தொடங்கி வைத்தார். அரங்கில், பல்வேறு கல்வி முதல்வர்கள், பேராசிரியர்கள், மாணவ-மாணவிகள் சூழ வெற்றிகரமாக நடத்திக் காட்டினார். இது பற்றி நாஞ்சில் பி.சி.அன்பழகன் தெரிவிக்கையில்,

‘ஹோமியோபதியின் ஒரு வடிவம் தான் எலக்ட்ரோபதி. இது 1865 ஆம் ஆண்டு இத்தாலி நாட்டில் தோன்றியது. அங்கு, கவுண்ட் சீசர் மேட்டோ என்ற ராணுவ அதிகாரி இருந்தார். அவர், தான் ஆசையாக வளர்த்த நாய்க்கு காய்ச்சல் ஏற்பட்டது. அதற்கு எத்தனையோ மருத்துவம் செய்தும் குணமாகவில்லை. இச்சூழலில், அந்த நாய் புதர்களை தோண்டி சில வேர்களை கடித்துச் சாப்பிட, சில நாட்களில் நோய் குணமாகிறது. இதன் மூலம் தாவரங்களின் வேர்களில் மருத்துவக் குணங்கள் இருக்கின்றன என்பதை ராணுவ அதிகாரி கண்டுபிடிக்கிறார்.

இது, நமது சித்த மருத்துவத்தில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே உள்ளது தான். அதை இவர் உள்வாங்கி, வேறு வடிவத்தில் எடுத்து வந்து, திரவ நிலைக்கு கொண்டு வருகிறார்.

இந்த திரவ நிலை மருந்தான எலக்ட்ரோபதி, துரித வேகத்தில் நமது உடம்பிலுள்ள எலக்ட்ரான், இரத்த அணுக்களில் பாய்ந்து நோயை குணமாக்குகிறது என கண்டுபிடிக்கிறார். இது, அனுபவப்பூர்வமாக உள்வாங்குகிற அரிய நிகழ்வு.

இது எப்படியென்றால், ஒரு புல்லாங்குழல் இருக்கிறது, காற்றும் இருக்கிறது. ஆனால், புல்லாங்குழலுக்குள் காற்று சென்றால்தானே சங்கீதம் ஆகிறது. அதுபோல, மனித நரம்புகளும் புல்லாங்குழல் மாதிரி தான். அதில், எலக்ட்ரோபதி மருந்தானது உள்ளே செல்களுக்குச் சென்று ரத்தத்தில் கலந்து நோயெல்லாம் குணமாகிறது என்பதை கண்டுபிடிக்கிறார்.

இது இந்தியாவில் மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்டு இருக்கும்போது, கன்னியாகுமரியில் உள்ள காருண்யா மருத்துவக் கல்வி நிறுவனர் மருத்துவர் அருணாச்சலம் தனது கல்லூரியில் பாடத் திட்டமாக கொண்டு வந்துள்ளார். தற்போது, இதை இந்தியா முழுவதும் விரிவாக்கம் செய்ய விரும்புகிறார். இதற்கான கருத்தரங்கம் குமரியில் நடைபெற்றது.

இக்கருத்தரங்கில், நான் திரைப்பட இயக்குனர் என்ற முறையில் இல்லாமல், இதற்கு மிகத் தொடர்புள்ள உறவு நிலையில் ஆர்கானிக் பொருள் செய்து வருகிறேன். அதாவது, ஒரிஜினல் தேன் கன்னியாகுமரி கிராம்பு நல்ல மிளகு என ஒன்பது பொருள்கள் அடங்கிய பரிசுத்தொகுப்பாக மனித ஆரோக்கிய மேம்பட கொடுத்து வருகிறேன். இது நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அவ்வகையில், கருத்தரங்கிற்கு அழைக்கப்பட்டிருந்தேன்.

இந்த எலக்ட்ரோபதியானது, ஆர்கானிக் முறையில.. சித்த மருத்துவம் உள்வாங்கிய ஒரு விஷயம் தான். இதன் நவீன பெயர் தான் எலக்ட்ரோபதி எனும் மாமருந்து. இந்த மருந்து முழுக்க முழுக்க சைவம் என்பது குறிப்பிடத்தக்கது. இப்ப, ஆங்கில மருந்தில் அசைவம் கலந்த சில உயிரினங்கள் பயன்படுத்தப்படும். ஆனால், இந்த மருந்து-மருத்துவம் முழுமையான சைவம். உடம்புக்கும் மிக மிக நல்லது’ என்றார்.

முன்னதாக, எஸ்.எழில் இயக்கத்தில் ‘தேசிங்கு ராஜா-2’ படத்தில் திரைப்பட இயக்குனர் நாஞ்சில் பி.சி.அன்பழகன் தென்மாவட்ட பாஷை பேசும் அரசியல்வாதியாக நடித்துள்ளார். தற்போது, இப்படத்திற்கான புரொமோஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.