AAA பட சர்ச்சைக்கு பிறகு STR மீண்டும் திரையுலகில் பிஸியான நடிகராக வலம் வரத் தொடங்கியுள்ளார். சுந்தர்.சி, வெங்கட் பிரபு, கார்த்திக் நரேன், சொந்த இயக்கத்தில் ஒரு படம் என அடுத்தடுத்த படங்கள் வரிசை கட்டி நிற்கின்றன.

சுந்தர் சி இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் படத்தின் படப்பிடிப்புகள் நேற்று தொடங்கி இருந்தன. இந்நிலையில் தற்போது மீண்டும் AAA  படத்தின் பிரச்சனை விஸ்வரூபம் எடுக்க தொடங்கியுள்ளது.

AAA படத்தின் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் எனக்கு சிம்புவால் ரூ 20 கோடி நஷ்டம். அதை சிம்பு ஈடுகட்டும் வரை அவரை மற்ற படங்களில் நடிக்க அனுமதிக்க கூடாது. சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகி வரும் படத்தின் படப்பிடிப்புகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என நேற்று தயாரிப்பாளர் சங்கத்தை நாடியுள்ளார்.

இதனால் தயாரிப்பாளர் சங்கம் என்ன முடிவெடுக்கும் என தெரியாமல் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இது ஒரு புறம் இருந்தாலும் AAA படத்திற்கு பிறகு STR மணிரத்தினம் இயக்கத்தில் செக்க சிவந்த வானம் என்ற படத்தில் நடித்தார்.

அப்போது பேசாத AAA தயாரிப்பாளர் தற்போது மீண்டும் சுந்தர்.சி படத்தின் போது ஏன் பேச வேண்டும் எனவும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.