ஜீவானந்தத்தை கொல்ல பிளான் போடுகிறார் கதிர்.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் நடக்கப்போவது என்ன என்பது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.
இது குறித்த வீடியோவில் ஈஸ்வரி ஜீவானந்தத்தை சந்திக்கிறார். அதனைத் தொடர்ந்து கதிர் ஞானத்திடம் அந்த ஜீவானந்தம் அவனா வந்து சிக்கி இருக்கான் விடக்கூடாது என பிளான் போட ஈஸ்வரி அதைக் கேட்டு விடுகிறார்.
அதனைத் தொடர்ந்து அப்பத்தா எல்லாரையும் கூட்டி வைத்து பங்க்ஷன் ஒன்னு ஏற்பாடு பண்ணி இருக்கேன் அதுக்கு நீங்க எல்லாரும் வந்துடனும் என அழைப்பு கொடுக்கிறார். அது மட்டுமல்லாமல் அதுக்கு தலைமை தாங்க போவது ஜனனி தான் என்று சொல்ல கதிர் கை தட்டுகிறார்.