
சந்தானத்திற்கு வேண்டுகோள் வைத்த சுந்தர் சி., என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க..!
சந்தானத்திற்கு சுந்தர் சி வேண்டுகோள் ஒன்று வைத்துள்ளார்.

director sundar c about santhanam
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராகவும் நடிகராகவும் இருந்து வருபவர் சுந்தர் சி. இவரது இயக்கத்திலும் விஷால் நடிப்பிலும் உருவான திரைப்படம் மதகஜராஜா.
வரலட்சுமி சரத்குமார் ,அஞ்சலி ,சந்தானம், மயில்சாமி ,மணிவண்ணன், மனோபாலா, போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர். 13 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த படம் வெளியானாலும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற வருகிறது. அதிலும் குறிப்பாக சந்தானத்தின் காமெடி பலராலும் பாராட்ட பெற்றுள்ளது என்றே சொல்லலாம்.
அந்த வகையில் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் சுந்தர் சி சந்தானம் குறித்து பேசி உள்ளார். அதில் சந்தானத்தை எவ்வளவு மிஸ் பண்றேன் என்று மதகஜராஜா படம் பார்த்தாலே தெரியும் அவர் பெரிய நாயகனாகிவிட்டார் ஆனால் அவருக்கு ஒரு வேண்டுகோள் அவர் மீண்டும் காமெடி கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் ரொம்ப மிஸ் பண்றோம் மிஸ் யூ சந்தானம் என்று பேசியுள்ளார்.
இவரின் இந்த பேச்சி இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

director sundar c about santhanam