இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் 2 படங்களின் ஷூட்டிங் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

தென்னிந்திய திரை உலகில் பிரம்மாண்ட திரைப்படங்களை இயக்கி ரசிகர்களின் மனதை கவர்ந்து முன்னணி இயக்குனராக வலம் வருபவர் இயக்குனர் ஷங்கர். இவர் நடிகர் கமல்ஹாசனை வைத்து இந்தியன் 2 திரைப்படத்தை இயக்கி வருகிறார். அதேபோல் ராம்சரணின் நடிப்பில் உருவாகும் RC15 என்னும் திரைப்படத்தையும் தற்போது இயக்கி வருகிறார்.

அது எப்படி சாத்தியம் ஒரே சமயத்தில் இரண்டு படங்களையும் இயக்குகிறார் என்று RC15 படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜவிடம் பேட்டி ஒன்றில் கேட்கப்பட்டது. அதற்கு அவர், மாதத்தில் 12 நாட்கள் இந்தியன் 2 படத்திற்கும் மீதமுள்ள 12 நாட்கள் ராம் சரண் படத்திற்கும் ஷங்கர் ஒதுக்கியிருக்கிறார். அதன்படி ஷூட்டிங் நடைபெற்று வருவதாக கூறியுள்ளார்.