திரைப்படங்களுக்கு ரிவ்யூ கொடுத்து பிரபலமான நடிகர் கூல் சுரேஷ் பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு அப்படத்தின் பாணியில் படத்திற்கு ரிவ்யூ கொடுத்துள்ளார்.

கல்கி புகழ் பெற்ற நாவலான பொன்னியின் செல்வன் கதையை இயக்குனர் மணிரத்தினம் பிரம்மாண்ட திரைப்படமாக உருவாக்கியுள்ளார். இப்படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30ஆம் தேதியான இன்று உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது. லைக்கா நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்திற்கு இசை புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

மாபெரும் பொருட்செலவில் உருவாகியுள்ள இப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், பார்த்திபன், சரத்குமார் போன்ற பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் இப்படம் இன்று அனைத்து திரையரங்குகளில் வெளியாகி உள்ள நிலையில் இப்படத்தை ரசிகர்கள் மேளதாளங்களுடன் வரவேற்றுள்ளனர்.

அந்த வகையில் படங்களுக்கு ரிவ்யூ கொடுத்ததன் மூலம் பிரபலமாக திகழும் நடிகர் கூல் சுரேஷ் பொன்னியன் செல்வன் திரைப்படத்திற்கு அப்படத்தின் பாணியில் குதிரையில் வந்து “வெந்து தணிந்தது காடு PS1க்கு வணக்கத்தை போடு” என்று எப்பொழுதும் கூறுவதைப் போல் இப்படத்திற்கு பலகையில் எழுதி வைத்து ரிவ்யூ கொடுத்துள்ளார். அந்தப் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.