சினேகன் அளித்த பேட்டி சமூக வளையதளங்களில் வைரலாகி வருகிறது.
Bigg Boss Snehan Latest Interview : தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் முதல் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டவர் கவிஞர் சினேகன்.
இவரை தொடர்பு கொண்டு பேட்டி ஒன்றை எடுத்தோம். அதில் பிக் பாஸ் குறித்து பல சுவாரஷ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார்.
அதே சமயம் விஜய் டிவியிடம் ஆவேசமாக சில கேள்விகளையும் முன் வைத்துள்ளார். சட்டங்களை உங்களுக்கு ஏற்றார் வகையில் மாற்றி கொள்கிறீர்கள்.
சரவணன் செய்த தவறுக்காக மன்னிப்பு கேட்டார் அவருக்கு எதிர்ப்பு வருகிறது என வெளியே அனுப்பி விட்டீர்கள். மதுமிதாவுக்கு உள்ளே என்ன நடந்தது என்பதை சொல்லாமலேயே வெளியேற்றி விட்டீர்கள்.
ஆனால் மைக்கில் பேட்டரியை கழட்டி விட்டு கவினும் லாஸ்லியாவும் பேசியது மிக பெரிய விதி மீறல். அவர்களை அப்போதே வெளியேற்றி இருக்க வேண்டும் என கொந்தளிப்புடன் பேசியுள்ளார்.