பிக் பாஸ் டைட்டிலை வென்ற கையோடு ராஜு ஜெயமோகன் பதிவு செய்துள்ள பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
Bigg Boss Raju Tweet After BB5 : தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகி என்ற பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஐந்தாவது சீசன் விருவிருப்பாக ஒளிபரப்பாகி வந்த நிலையில் நேற்றோடு முற்றிலுமாக முடிவு பெற்றது.
இந்த நிகழ்ச்சியில் டைட்டில் வின்னராக ராஜு ஜெயமோகன் வெற்றி பெற்றார். இவருக்கு 50 லட்சம் ரூபாய் பரிசு தொகை வழங்கப்பட்டது. இவருக்கு அடுத்ததாக இரண்டாவது இடத்தை பிரியங்காவும், பாவனி 3வது இடத்தையும் பிடித்தனர்.
பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி டைட்டில் வென்ற ராஜி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் நன்றிகள் என ஒரே வார்த்தையில் தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். இதனையடுத்து ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக் கூறி வருகின்றனர்.