Bharathi Kannamma Update 04.09.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. அஞ்சலி செலுத்த ஏற்பாடுகள் தடபுடலாக நடைபெறுகிறது. சீமந்தத்திற்கு வாண்ட்டடாக வந்த வெண்பா கூட்டத்தில் எல்லார் முன்பும் பாரதியின் மனைவி போலவே நடந்து கொள்கிறார்.
பண்டிகை காலங்கள் நெருங்குவதையொட்டி, பொதுமக்களுக்கு அரசு முக்கிய அறிவுறுத்தல்
இதனை பார்த்த சௌந்தரியா வெண்பா பாரதியின் மனைவி கிடையாது எனவும் கண்ணம்மாவு கூறமுடியாமல் தவிக்கிறார். காரணம் பாரதி சௌந்தர்யாவிடம் வாங்கிய சத்தியம்.
வெண்பாவை பார்த்து பாரதி புடவை சூப்பர், அழகா இருக்க என்று அடிக்கடி கூறி கண்ணம்மாவை வெறுப்பேற்றுகிறார். இதெல்லாம் ஒருபுறமிருக்க இன்னொருபுறம் கண்ணம்மா அவருடைய மாமியாரை தேடி தேடி இரட்டை குழந்தை விஷயத்தை கேட்க முயற்சி செய்கிறார். ஆனால் தொடர்ந்து கண்ணம்மாவுக்கு ஏதாவது ஒரு காரணத்தைக் கூறி டிமிக்கி கொடுத்து வருகிறார்.
பின்னர் சீமந்த விழா மேடையில் லஷ்மியிடம் பாரதி லஷ்மி உங்க அம்மாவை இப்போதும் சமையல் அம்மான்னு தான் கூப்பிடுறியா என கேட்கிறார். அஞ்சலி பாரதியை நலங்கு வைக்க அழைக்கிறார். இந்த சமயத்தில் இது தான் சந்தர்ப்பம் இப்போ பாரதியுடன் சேர்ந்து நலங்கு வைத்தால் என்ன வரும் நான்தான் அவருடைய மனைவி என நினைத்துக் கொள்வார்கள் என திட்டம் போட்டு நலங்கு வைக்க செல்கிறார்.
என்னை Comali-யா மாத்த பாக்கறீங்க..,அறுத்து கிழிச்சிடுவ – G.P.Muthu-வின் கலக்கல் Shopping.!
வெண்பாவின் திட்டத்தை புரிந்து கொண்ட அஞ்சலி கல்யாணம் ஆகாதவங்க ஆசிர்வாதம் பண்ணலாமா என அவருடைய அம்மாவிடம் கேட்கிறார். அதற்கு அவருடைய அம்மா யார் வேணாலும் ஆசிர்வாதம் செய்யலாம். ஆனா கல்யாணம் ஆனவங்களும் குழந்தை பெத்தவங்களும் செய்யறதுதான் நம்மளோட வழக்கம் என கூறுகிறார். மேலும் இது யாராச்சும் கல்யாணம் ஆகாதவங்க இருக்காங்களா என கேட்க இதோ இருக்காங்களே டாக்டர் வெண்பா அவங்களுக்கு இன்னும் கல்யாணம் ஆகவில்லையே என்று கூறி கண்ணம்மாவுக்கு இருவருக்கும் திருமணம் ஆகவில்லை என்ற உண்மையை வெளிப்படுத்துகிறார் அஞ்சலி. இத்துடன் முடிகிறது இன்றைய பாரதிகண்ணம்மா எபிசோட்.