சௌந்தர்யாவை வீட்டை விட்டு வெளிய அனுப்பி உள்ளார் கண்ணம்மா.
Bharathi Kannamma Episode Update 25.01.22 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. பாரதி கண்ணம்மாவை அசிங்கப்படுத்திய நிலையில் அங்கிருந்து வெளியே வந்த கண்ணம்மாவை பார்த்து ஆறுதல் சொல்ல வீட்டிற்கு வருகிறார் சௌந்தர்யா. வீட்டுக்கு வந்த சௌந்தர்யாவிடம் மிகவும் கோபமாக பேசுகிறார் கண்ணம்மா.
எதுக்காக இங்க வந்தீங்க? உங்க புள்ள அவ்வளவு கேவலமா பேசுவது எல்லாரும் நின்னு வேடிக்கை தான் பார்த்தீங்க ஒருத்தராவது ஏன் இப்படி பேசுறேனு கேட்டீங்களா? பேசுனது உங்க புள்ளனு அமைதியா நின்னுட்டு இருந்தீங்களா? அங்க ஒரு வார்த்தை கூட பேசாமல் இருந்திட்டு இங்க வந்து கொஞ்சம் அமைதியா இரு குழந்தைகளுடன் எதிர்காலத்தை நினைத்து பாரு, பொறுமையாய் இருனு எனக்கு அறிவுரை சொல்ல வந்துட்டீங்களா? இதுவரைக்கும் அதுதானே நடந்தது. இதுக்கு மேல ஒரு பொண்ணால எப்படி பொறுமையாக இருக்க முடியும்? அப்படி இருக்கணும்னா கல்லாகவும் பாறையாகவும் தான் இருக்கணும்.
அவனெல்லாம் ஒரு ஆளா? மத்தவங்க மனச காயப்படுத்துதல் டாக்டர் பட்டம் வாங்கி இருக்காரு உங்க புள்ள. அவ இல்லாம என்னால வாழ முடியாதா? புருஷனா பொம்பளைங்க எல்லாத்தையும் பொறுத்துக்கொண்டு தான் போகணுமா? ஒரு நாளும் என் சுயமரியாதையை விட்டு தர மாட்டேன். உங்க புள்ள இந்த ஜென்மத்துக்கும் திருந்த மாட்டாரு. ஒரு நாளும் அவரால சந்தோஷமா இருக்க முடியாது. சாபம் விடல இந்த மாதிரி சந்தேக புத்தி உள்ளவங்க அவர்களும் சந்தோஷமாக இருக்க மாட்டாங்க மத்தவங்களையும் சந்தோஷமா வச்சுக்க மாட்டாங்க என கூறுகிறார்.
எனக்கு உதவின்னு ஒன்று பண்ணனும்னு நெனச்சா உங்க பையன தரதரவென்று இழுத்துப் போய் ஒரு ஆஸ்பிட்டல்ல டிஎன்ஏ டெஸ்ட் எடுங்க. அப்போ தெரிந்துவிடும் இல்ல இந்த ரெண்டு புள்ளைக்கும் யாரு அப்பானு.. ஆனா உங்களால முடியாதுல அப்போ எனக்கு உதவினு பண்ண ஒன்னுமே இல்லை என கூறுகிறார்.
சௌந்தர்யா கண்ணம்மாவிடம் அங்கு அமைதியாக இருந்ததற்காக மன்னிப்பு கேட்கிறார். உன்னோடு கோபத்தை முழுசா என்னால புரிஞ்சுக்க முடியுது என கூறுகிறார். இப்படியொரு பிள்ளையை பெத்ததுக்காக நான் உன்கிட்ட மன்னிப்பு கேட்டுக்குறேன் என கூறுகிறார். மேலும் எங்க எல்லாரையும் அமைதியாக இருந்து என கேட்டு நீ எதுக்கு அங்க அமைதியா இருந்த? அப்பவே அவனை அறை விட்டு கேட்க வேண்டியதுதானே.? சட்டையைப் பிடித்து கேள்வி கேட்க வேண்டியதுதானே என கூறுகிறார் சௌந்தர்யா. உன்கிட்ட ஒரு கேள்வி கேட்கிறேன் தெள்ள தெளிவா பதில் சொல்லு உனக்கு பாரதி வேணுமா வேணாமா? வேணான்னு சொல்லுவேனு பார்த்தீங்களா? எனக்கு புருஷன தேவையில்லை என 2 குழந்தைகளுக்கு அப்பாவாக வேண்டும். போய் கூட்டிட்டு வாங்க, உங்க புள்ள ஒத்துக் கொள்வாரா என கண்ணம்மா கேட்கிறார்.
பிறகு போதும் எனக்கு யாரும் வேணாம் நான் தனியாவே இருந்து கொள்கிறேன் வெளியே போங்க என சொல்ல சௌந்தர்யா என் பொண்ணு பேசினா எப்படி அமைதியா போவனோ அப்படி அமைதியா போறேன் சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்புகிறார். கண்ணம்மா அதன் பிறகு மன்னிச்சிடுங்க அந்த கோபத்தை யார் கிட்ட காட்டுறதுனு தெரியல என கண் கலங்கி அழுதார்.
வீட்டுக்கு போன சௌந்தர்யா கண் கலங்கி அழுது கொண்டிருக்க அவருடைய கணவர் எல்லாத்துக்கும் நீதான் காரணம் என திட்ட சௌந்தர்யா என் புள்ள வாழ்க்கை கண்ணு முன்னாடி அழிஞ்சு போறதை என்னால பார்க்க முடியாது. இனிமேலும் நான் என்னோட முயற்சியை பண்ணிட்டு தான் இருப்பேன் என கூறுகிறார்.
பிறகு பாரதி தன்னுடைய பொருட்களை எடுப்பதற்காக கண்ணம்மா வீட்டிற்கு வருகிறார். நான் எதுக்கு உன் வீட்டு வாசப்படி மிதிக்கணும்? உனக்கு ஒரு வாய்ப்பு கொடுத்தேன் அதை கூட உன்னால ஏத்துக்க முடியல. திமிர் பிடிச்சவ என கூறுகிறார். இத்துடன் இன்றைய பாரதிகண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது.