கண்ணம்மா மீது தவறில்லை என பாரதி நினைக்கத் தொடங்கியதை அடுத்து வெண்பாவிற்கு வேட்டு வைத்துள்ளார்.
Bharathi Kannamma Episode Update 22.09.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. கண்ணமா மீது சந்தேகப்பட்டு வந்த பாரதி தற்போது அவர் மீது தவறு இல்லாமல் இருக்கலாம் என யோசிக்கத் தொடங்கி உள்ளார். இது குறித்து வெண்பாவிடம் பேசிய போது அவர் மூணு மணிக்கு பீச்சுல கண்ணம்மா அந்த கவிஞரோட இருந்ததை நீயும் நானும் தான் பார்த்தோம்.
கேப்டன் பதவியிலிருந்து கோலி விலகியது ஏன்? ஒரு பவுலரின் கண்டுபிடிப்ப
அதேபோல் அந்த கவிஞர் அவர் வாங்கியதற்காக அவர் வீட்டிற்கு சென்றிருந்த போது உன்ன குடிக்க வச்சிட்டு ரெண்டு பேரும் தனியா ஒரு ரூம்ல இருந்ததையும் பார்த்த என பழையதை மீண்டும் நினைவுக்குக் கொண்டுவந்து பாரதியின் எண்ணத்திற்கு முடிவு கட்ட முயற்சிக்கிறார். இதையெல்லாம் கேட்ட பாரதி மீண்டும் கண்ணம்மா மீது கோபம் கொள்கிறார். அதையெல்லாம் நான் சாகுற வரைக்கும் மறக்க முடியாது என கூறுகிறார்.
இன்னொருபுறம் கோவிலில் பரிகாரம் செய்து விட்டு வீட்டுக்கு வந்த அஞ்சலி வெண்பா கூறியதுபோல இரண்டு மாத்திரையை எடுத்துக் கொள்ள முயற்சி செய்கிறார். அப்போது திடீரென அவர் மீது பல்லி வந்து விழுகிறது. ஆனால் அவர் அதற்கான பரிகாரத்தை பார்த்து பயம் கொள்கிறார்.
பைக்கில் உலகம் சுற்ற தயாராகும் Thala Ajith – சாகசப் பெண்ணிடம் ஆலோசனை!
இந்த சமயத்தில் வீட்டிற்கு வந்த பாரதி அனைவரையும் ஒன்றாக அமர வைத்து என் கண்ணம்மா மேல தப்பு இல்லாம இருக்கக் கூடாது. இவ்வளவு நாளா நான் தான் தப்பா புரிஞ்சுகிட்டு இருக்கணும் என தோன்றுகிறது. இருக்கிற கொஞ்ச நாள் ஆகுது அவளோடு சேர்ந்து வாழ மாட்டமான்னு மனசு அடிச்சுகிது என கூறுகிறார்.
பாரதி இவ்வாறு பேசியதை பார்த்து வீட்டில் உள்ள அனைவரும் மகிழ்ச்சி கொள்கின்றனர். அப்பாவின் மீது சாய்த்துக்கொண்டு அழுகிறார் பாரதி. இத்துடன் முடிகிறது இன்றைய பாரதிகண்ணம்மா எபிசோட்.