சௌந்தர்யாவுக்கு கண்ணம்மா அனுப்பிய போட்டோவால் புதிய சிக்கல் உருவாகியுள்ளது.
Bharathi Kannamma Episode Update 16.12.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. பாரதி மருத்துவமனைக்குச் சென்று வந்த கண்ணம்மா ஆட்டோவில் வரும் போது வாய்தா வடிவுக்கரசி நன்றி தெரிவித்து வருகிறார். நீங்க மட்டும் இல்லேன்னா அவர் பேசுவதை கேட்டுட்டு நான் திரும்பி வந்து இருப்பேன். உங்களுக்கு பயந்துதான் அவர் எனக்கு மருத்துவம் பார்த்தார் என கூறுகிறார். பிறகு அந்த போட்டோவை அனுப்புங்கள் என கேட்கிறார். மேலும் வாய்தா வடிவுகரசி கண்ணம்மா வீட்டின் வெளியே பாரதி எம்பிபிஎஸ் என ஒரு போர்டு மாட்ட சொல்லி ஐடியா கொடுக்கிறார். அதனால் இந்த ஏரியா முழுக்க உன்னோடு கணவர் பாரதிதான் என தெரியும். ஆனால் கண்ணம்மா இது செய்தால் எங்கே அவர் கிளம்பிப் போய் விடுவாரோ என பயப்படுகிறார்.
அதன் பிறகு கண்ணம்மாவுக்கு ஃபோட்டோ வந்ததும் அந்த போட்டோக்களை சவுந்தர்யாவுக்கு அனுப்பி வைக்கிறார். சௌந்தர்யா ஹேமாவையும் லட்சுமியையும் ஸ்கூலில் இருந்து வீட்டிற்கு கூட்டிச் செல்லும் நேரத்தில் காரில் இருவரும் போனில் எதையோ பார்த்துக் கொண்டிருக்க அந்த நேரத்தில் இந்த புகைப்படம் வருகிறது. இந்தப் புகைப்படத்தை குழந்தைகள் இருவரும் பார்த்துவிட இவங்க எப்படி சந்தித்துக் கொண்டார்கள் என சந்தேகம் வருகிறது.
லட்சுமி எங்கம்மா எப்படி டாக்டர் அங்கிளை பார்த்தாங்க என கேட்க சௌந்தர்யா அம்மாவுக்காக அடிக்கடி உடம்பு சரி இல்லாமல் போகுதுல அதனால நான் தான் போய் ஃபுல் பாடி செக்கப் செய்ய சொன்னேன். அதனாலதான் போயிருக்காங்க என சொல்லி சமாளித்து விடுகிறார். டாடி ஹாஸ்பிடலுக்கு எல்லாம் வராது என வந்து பார்க்க மாட்றாரு என ஹேமா சொல்கிறார்.
உடனே சௌந்தர்யா ஏதாச்சு முக்கியமான விஷயம் இருந்து இருக்கும் அதனால ஹாஸ்பிடலுக்கு வந்திருப்பான் மத்த படி அவன் கேம்ல தான் இருக்கான் என கூறுகிறார். அதன்பிறகு வீட்டிற்கு வந்ததும் லக்ஷ்மி அம்மாவுக்கு என்ன ஆச்சு எனக்கு தெரியல என யோசனையில் இருக்க அப்போது வந்த ஹேமா ஏன் டல்லா இருக்க என கேட்கிறார். உடனே லக்ஷ்மி அம்மா ஞாபகமா இருக்கு என கூறுகிறார்.
ஹேமா எனக்கும் டாடி ஞாபகமா இருக்கு என சொல்கிறார். ஆமா உங்க அப்பா பேரு என்ன என ஹேமா கேட்க லட்சுமி பாரதி என கூறுகிறார். நம்ப ரெண்டு பேர் அப்பா பேரும் ஒரே மாதிரி இருக்கு என ஹேமா சொல்கிறார். அதன் பிறகு உங்க அம்மா பேரு என்ன என கேட்க லட்சுமி பதில் சொல்வதற்குள் சௌந்தர்யா அங்கு வந்து விடுகிறார்.
பிறகு கண்ணம்மாவுக்கு போன் செய்து லட்சுமியை பேச வைக்கிறார். பிறகு அவரை சாப்பிட அனுப்பி வைத்துவிட்டு ஹேமாவை பேச வைக்கிறார். மேலும் இன்றைய எபிசோடில் வாய்தா வடிவுக்கரசி சௌந்தர்யாவால் அனுப்பி வைக்கப்பட்ட ஒருவர் தான் என்பது தெரிகிறது. இத்துடன் இன்றைய பாரதிகண்ணம்மா எபிசோட் முடிவடைகிறது.