கண்ணம்மா பற்றி பாரதியிடம் பேச அவர் விவாகரத்து பற்றி உறுதியான முடிவை கூறியுள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. மாப்பிள்ளையை சந்திக்கச் சென்றிருந்த வெண்பாவிடம் அடியாட்கள் தகாத முறையில் நடந்து கொள்ள அப்போது என்ட்ரி கொடுத்த ரோகித் அனைவரையும் துவம்சம் செய்து வெண்பாவை காப்பாற்றுகிறார்.
பிறகு வெண்பா அவருக்கு நன்றி தெரிவித்து நாளைக்கு கண்டிப்பா நீங்க எங்க வீட்டுக்கு வரணும் என கூறுகிறார். பிறகு ரோஹித்தும் சரி கண்டிப்பாக வருகிறேன் என வாக்கு கொடுக்கிறார்.
அதன் பிறகு வீட்டுக்கு வந்த வெண்பா தன்னுடைய அம்மாவிடம் தன்னிடம் ஒருவன் தவறாக நடந்ததாகவும் அவனை ஒருவன் அடித்து துவம்சம் செய்ததாகவும் அந்த நபரை நாளைக்கு வீட்டிற்கு வர சொல்லி இருப்பதாகவும் கூறுகிறார். நாளைக்கு தான் மாப்பிள்ளை வருகிறார் அப்போது இன்னொரு பையன் இருந்தால் நன்றாக இருக்காது என சொல்ல வெண்பா என்னுடைய பிரண்ட் கண்டிப்பா வருவார் என கூறி விடுகிறார். அந்த பிரண்டு தான் வெண்பாவிற்கு பாட்டுல மாப்பிள்ளை என்பது நாளை எபிசோடில் தெரியவரும்.
இந்தப் பக்கம் ஹேமாவும் லட்சுமியும் பாரதிக்கும் கண்ணம்மாவுக்கும் கல்யாணம் பண்ணி வைக்க வேண்டும் என பேசுகின்றனர். பிறகு பாரதி வீட்டிற்கு வரும்போது சௌந்தர்யா அவரிடம் கோர்ட்டில் இருந்து வந்த நோட்டீஸ் கொடுத்து கண்ணம்மாவுடனான விவாகரத்து பற்றிய விஷயத்தை கேட்க பிரிவது உறுதி என பாரதி கூறுகிறார்.
செய்யாத தவறுக்காக கண்ணம்மாவை இவ்வளவு நாளா தண்டித்தது போதும் அவன் ஒரு பொம்பள பிள்ளைய வெச்சு இருக்கா அவ கண்கலங்கி சாபமிட்டா நாம தாங்க மாட்டோம், இப்போதைக்கு இந்த முடிவை கொஞ்சம் தள்ளி வை என கூறுகிறார். ஏற்கனவே நான் உடைஞ்சு போய் இருக்கேன் இதிலிருந்து வெளியே வர இதுதான் ஒரே வழி தயவு செய்து இதில் தலையிடாதீர்கள் என தன்னுடைய அம்மாவிடம் கூறிவிடுகிறார் பாரதி.
சௌந்தர்யா எவ்வளவோ சொல்லியும் பாரதி தன்னுடைய முடிவில் உறுதியாக இருக்கிறார். இத்துடன் இன்றைய பாரதிகண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது.