போட்டோவை காட்டி செழியனை மிரட்டி உள்ளார் மாலினி.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இது சீரியலின் இன்றைய எபிசோடில் அமிர்தாவை தேடி பாக்கியாவின் வீட்டுக்கு வந்த எழில் போட்டோவை பார்த்து அதிர்ச்சி அடைந்து நிற்கிறார்.
கணேஷ் கலங்கி நிற்க அங்கு வந்த பாக்கியா யாருப்பா நீ எழிலோட பிரண்டா அவனை கூப்பிடவா என்று கேட்க கணேஷ் சமாளித்து அங்கிருந்து வெளியே வருகிறார். பிறகு பீச்சுக்கு வந்த கணேஷ் அமிர்தாவை எழுந்தவுடன் இருக்கும் போட்டோவை பார்த்ததை நினைத்து நினைத்து பார்த்து கண்கலங்கி துடிக்கிறார்.
அப்போது கணேசின் அப்பா போன் செய்ய என்கிட்ட எல்லாமே மறைச்சுட்டீங்க இல்ல அமிர்தாவுக்கு இன்னொருத்தரோட நீங்க தான் கல்யாணம் பண்ணி வச்சிருக்கீங்க என சத்தம் போட அவர்கள் அமிர்தாவ டிஸ்டர்ப் பண்ண வேண்டாம் நீ அவ வீட்டுக்கு போக கூடாது என சொல்ல நான் அமிர்தவோட தான் திரும்ப வருவேன் என அதிர்ச்சி கொடுத்து ஃபோனை வைக்க அவர்கள் சென்னை கிளம்ப முடிவெடுக்கின்றனர்.
அதைத்தொடர்ந்து வீட்டில் ஆவேசமாக இருக்கும் மாலினி பொருட்களை தூக்கி போட்டு உடைத்து செழியனுக்கு சில போட்டோக்களை அனுப்பி நீ இப்ப வரலைன்னா நான் உங்க வீட்டுக்கு வந்து இந்த போட்டோக்கள் எல்லாத்தையும் காட்டுவேன் என மிரட்ட செழியன் செய்வதறியாது தவிக்கிறார்.
பிறகு ஜெனி தூங்கி பிறகு செழியன் எழுந்து மாலை வீட்டுக்கு கிளம்ப முயற்சி செய்ய பாக்யா எதிரே வந்து நின்று அதிர்ச்சி கொடுக்கிறார். நீ எங்கேயும் போகக்கூடாது மேல போறியா இல்ல வீட்ல இருக்க எல்லாரையும் கூப்பிட்டு சொல்லவா என்று மிரட்ட செழியன் மேலே சென்று விடுகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.