ஈஸ்வரி மொத்தமாக உடைந்து போக பாக்யா எழிலிடம் கோபப்பட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி.
இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் ஈஸ்வரி ரோட்டில் நின்றபடி கண்கலங்க பாக்கியா அத்தை என்ன ஆச்சு என்று கேட்க ஈஸ்வரி நடந்த விஷயத்தில் தள்ளிப் படம் தான் வாங்க நம்ம வீட்டுக்கு போகலாம் என்று கூட்டி வருகிறார்.
வீட்டுக்கு வந்ததும் ஈஸ்வரி தரையில் உட்கார்ந்து அழுது புலம்ப எல்லோரும் ஓடிவந்து பாட்டி என்ன ஆச்சு என்று கேட்கின்றனர். நான் அழுகிறது உங்களை யாராலையும் தாங்கிக்க முடியல ஆனா நான் பெத்த பையன் என்ன வீட்டை விட்டு வெளியே துரத்திட்டான் என்று கலங்குகிறார்.
ராமமூர்த்தி என்ன ஆச்சு அதான்னு சொல்லு என்று கேட்க ஈஸ்வரி நான் தான் ராதிகாவை பிடித்து தள்ளி குழந்தையை கொன்னுட்டேன்னு சொல்றாங்க. இத கமலாவும் ராதிகாவும் நான் அந்த வீட்ல இருக்க கூடாதுன்னு நினைச்சாங்க அதனால இப்படி சொல்றாங்க ஆனா கோபியும் அதே மாதிரி சொல்லி என்னை வெளியே போனு சொல்லிட்டான்.
எனக்கு அந்த குழந்தை பிறப்பே இருக்கு இல்ல விருப்பம் இல்ல தான் ஆனா அதுக்காக ஈவு இரக்கமே இல்லாம அந்த குழந்தையை சாகடிப்பேனா? நான் அப்படி பண்ணுவேன் என்று அழுது புலம்புகிறார். என்ன கோபியை என்னுடைய உலகமா நினைச்சுட்டு இருந்தேன் ஆனா அவன் இப்படி ஒரு வார்த்தையை சொல்லுவானு கொஞ்சம் கூட நினைக்கல என தலைவி துடிக்க எல்லோரும் பாட்டி அழாதீங்க என்று ஆறுதல் சொல்லி ரூமுக்கு அழைத்துச் சென்று உட்கார வைக்கின்றனர்.
என் அந்த ஆளு என்ன நெனச்சிட்டு இருக்காரு என்று சண்டைக்கு கிளம்ப பாக்கியா நீ போய் அவரிடம் அந்த பாட்டு அவர் ஆமா நான் தான் பண்ணேன்னு சொன்னா உனக்கு மனசு ஆறிடுமா? அவர் சுயநலவாதி அவருக்கு தேவைனா என்ன வேணாலும் பேசி மயக்கி கூட்டிட்டு போவாரு தேவையில்லன்னா கருவேப்பிலை மாதிரி தூக்கிப்போட்டு போயிட்டே இருப்பாரு, நீ போய் சண்டை போடுறதுனால எதுவும் ஆகப்போறது இல்ல, இப்ப பாட்டியை சரி செய்வது தான் நம்முடைய வேலை என்று சொல்கிறார்.
பிறகு பாக்கியா ஈஸ்வரியை சாப்பிட சொல்ல ஈஸ்வரி எனக்கு வேண்டாம் என்று சொல்ல ராமமூர்த்தி ஒரு குட்டி கதையை சொல்லி ஈஸ்வரிக்கு ஆறுதல் சொல்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.