Baakiyalakshmi Serial Episode Update 30.09.21

கர்ப்பத்தை கலைக்க பணம் செழியன் ஜெனிக்கு டாக்டர் அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

Baakiyalakshmi Serial Episode Update 30.09.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. வீட்டிற்கு வந்திருந்த அமிர்தாவிடம் ஈஸ்வரி பாட்டி நீ எதற்கு பாக்யாவுக்கு இப்படி எல்லாம் உதவி செய்யுற?? அவதான் தேவை இல்லாத வேலை எல்லாம் பார்த்துட்டு இருக்கா உனக்கு எதுக்கு இந்த வேலை என கேட்கிறார். அதற்கு அமிர்தா அவங்க சிகரெட் எல்லாம் எனக்கு பிடிச்சிருக்கு அதனால தான் நான் இதை சொல்கிறேன் என சொன்னார்.

பக்தர்கள் இதனை நம்பவேண்டாம் : திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு

இது ஒருபுறமிருக்க செழியன் தற்போது குழந்தை வேண்டாம் என கூறியதை தொடர்ந்து ஜெனியை அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு செல்கிறார். டாக்டரைப் பார்க்கப் போன அவர்கள் தற்போதைக்கு குழந்தை வேண்டாம் என முடிவு செய்துள்ளோம் என என கூற கருவை கலைக்க வேண்டும் என கேட்கிறார் டாக்டர். ஆமாம் இருவரும் சேர்ந்து எடுத்த முடிவுதான் என செழியன் கூறுகிறார்.

இந்த மாதிரி தான் இனிமே வரணும் – Rudra Thandavam Special Show | Rishi Richard, Dharsha | HD

டாக்டர் தனக்கு மூன்று குழந்தை. முதல் குழந்தை நான் பிஜி படிக்கும்போது பெற்றுக்கொண்டது. இரண்டாவது குழந்தை மருத்துவமனையில் வேலை செய்த போது பெற்றுக் கொண்டேன். மூன்றாவது குழந்தை இந்த மருத்துவமனை துவங்கும்போது பெற்றுக் கொண்டேன் என கூறுகிறார். குழந்தைக்கும் கெரியருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ‌ என கூறி நல்லா யோசித்துவிட்டு முடிவெடுங்க‌. ஒருவேளை வேண்டாம் என முடிவு செய்தால் வேறு ஒரு டாக்டரைப் பாருங்கள் என கூறுகிறார். மேலும் முதல் குழந்தையை அபார்ட் செய்தால் அடுத்து குழந்தை பிறப்பதில் பிரச்சனை ஏற்படலாம் என கூறுகிறார்.

இதனால் செழியன் அதிர்ச்சியடைய ஜெனி மகிழ்ச்சி கொள்கிறார். இந்த பக்கம் பாக்கிய தன்னுடைய மாமனார் மற்றும் செல்வியை அழைத்துக்கொண்டு மளிகைச் சாமான் மற்றும் சமையல் பாத்திரங்களை அட்வான்ஸ் தொகை கொடுத்து கடைக்காரர்களிடம் மீதி பணத்தை இரண்டு நாட்கள் கழித்து தருவதாக கூறி அவர்களிடம் சம்மதம் வாங்கி வருகிறார். ‌‌

இதனை அடுத்து பாக்கியா அனைவருக்கும் மளிகைப் பொருட்களை பிரித்து கொடுக்கிறார். கடைசியில் இருவரும் மளிகை பொருட்கள் வாங்க வராமல் இருந்த நிலையில் ஒருவர் மட்டும் வந்து நான் செய்யவில்லை எனக்கு ஒரு அதிர்ச்சி கொடுக்கிறார். இத்துடன் முடிகிறது இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட்.