குடும்பத்தை விட்டு பிரிந்து வர சொல்கிறார் ராதிகாவின் அம்மா.

Baakiyalakshmi Serial Episode Update 09.11.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. வீட்டில் அனைவரும் அமர்ந்து கொண்டிருக்க பாக்கியா இரண்டு நாளா மாமாவின் முகம் சரியாக இல்லை அவருக்கு ஏதாவது பிரச்சனையா உடம்புக்கு முடியவில்லையா என தன்னுடைய மாமியாரிடம் கேட்கிறார். அவருக்கு ஊர் ஞாபகம் வந்துட்டு இருக்கும். அவங்க தம்பி வேற போன் பண்ணியிருந்தார். அதான் அப்படி இருப்பார் என பாட்டி சொல்கிறார்.

இந்த நேரத்தில் பாக்கியாவின் மாமனார் கையில் பையோடு வந்து தான் ஊருக்கு கிளம்புவதாக கூறுகிறார். ஊரில் சில வேலைகள் இருப்பதாக அதனால் போயிட்டு சில நாட்களில் வந்து விடுவேன் என சொல்கிறார். சொத்தல்லாம் அப்படியே கிடக்கு.. எனக்கும் வயசாகிட்டே போகுது அதை மாற்றி எழுத வேண்டாமா என கூறுகிறார். அது யாரு பேருக்கு மாத்தனும் அமைக்கப்படும் நம்முடைய பிள்ளைக்கு தான் ஈஸ்வரி கூறுகிறார். குத்தகைக்கு விட்டது என்றும் அப்படியே இருக்கு நான் ஒரு எட்டு பார்த்துட்டு வந்து விடுகிறேன் என கூறுகிறார்.

இன்றைய ராசி பலன்.! (9.11.2021 : செவ்வாய்க் கிழமை)

பிறகு எழில் அவருடைய தாத்தாவை கூட்டிக்கொண்டு பஸ் ஸ்டாண்டிற்கு செல்கிறார். பாக்கியா மீண்டும் அத்தையிடம் மாமாவுக்கு ஒன்னும் இல்ல இல்ல என்னை கேட்க ஈஸ்வரி பாட்டி அதெல்லாம் ஒன்றுமில்லை என கூறுகிறார்.

மறுநாள் காலையில் செழியன் கார் பார்க்கிங்கில் நின்று கொண்டு ஜெனி பற்றி யோசித்துக் கொண்டிருக்கிறார். ஜெனிக்கு போன் செய்ய அவர் எடுக்கவில்லை. இந்த நேரத்தில் பாக்கியா வருகிறார். பாக்கியா விடம் நான் ஜெனியை ரொம்ப மிஸ் செய்கிறேன். நான் பண்ணதெல்லாம் தப்பு தான் என கூறுகிறார். பிறகு செழியன் வருத்தப்படுவதை பார்த்த பாக்கியா நேராக உள்ளே சென்று வந்து தன்னுடைய போனில் இருந்து ஜெனிக்கு கால் செய்கிறார். ஜெனி போனை எடுத்து பேசுகிறார். பாக்கியா ஜெனியிடம் நலம் விசாரிக்க அவரும் பதிலுக்கு அனைவரும் எப்படி இருக்கிறார்கள் என நலம் விசாரிக்கிறார். பிறகு செழியன் எப்படி இருக்கிறான் ஆன்ட்டி. குடித்து வந்ததும் எனக்கு ஒரு மாதிரி பயமாயிருந்தது. அவனை பாத்துக்கங்க திரும்பவும் குடிக்க வேணாம்னு சொல்லுங்க. எனக்கும் அவங்கிட்ட பேசணும்னு ஆசையா தான் இருக்கு ஆனா என்ன பேசறதுன்னு தெரியல. இப்ப கூட போன் பண்ணா ஆனா நான் எடுக்கல என சொல்ல பாக்கியா உனக்கு எப்ப பேசணும்னு தோணுதோ அப்ப பேசு என கூறுகிறார். ஜெனி தன்னைப்பற்றி நலம் விசாரிப்பதை கேட்ட செழியன் கண் கலங்குகிறார். ஜெனி பாவம் என கூறுகிறார்.

பிறகு அனைவரும் அமர்ந்து கொண்டிருந்த நேரத்தில் கோபி வருகிறார். ஈஸ்வரி நீயும் பாக்கியாவும் அந்த ரிசப்ஷனுக்கு போயிட்டு வந்துடுங்க என கூறுகிறார். கோபி நாய் அதிகமா நீங்க போய்ட்டு வாங்க என கூறுகிறார். நீ தான் போயிட்டு வரணும் பாக்கியாவும் நீயும் போங்க. ‌‌ பொம்பளைங்க மட்டும் போனா நல்லா இருக்காது என ஈஸ்வரி பாட்டி சொல்ல உடனே எழிலை கூட்டிக்கொண்டு போகச் சொல்கிறார். எனக்கு சூட்டிங் எடுக்கும் என சொல்கிறார் எழில். பிறகு ஒரு வழியாக ரிசப்ஷனுக்கு செல்ல ஓகே சொல்கிறார் கோபி.

ஒரே அடிதான் உனக்கு.., Anchor-ஆல் கடுப்பான KPY Dheena..!

இந்த பக்கம் ராதிகா மய்யூவை ஸ்கூலுக்கு அனுப்பிவிட்டு ரிசப்ஷனுக்கு கிளம்புகிறார். இன்னைக்கு ஒரு ரிசப்ஷன் இருக்கு உங்களுக்கு மட்டும் சாப்பாடு வைத்து இருக்கேன் சாப்பிடுங்க என தன்னுடைய அம்மாவிடம் கூறிவிட்டு கிளம்புகிறார். ராதிகா நேற்று நடந்ததை நினைத்து அம்மாவிடம் சரியாக பேசாத நிலையில் அவருடைய அம்மா நேத்து சொன்னதை நினைச்சு கோவமா இருக்கியா என கேட்கிறார். கல்யாணமான கோபி எதுக்கு அவருடைய குடும்பத்தை விட்டு உங்களை வந்து கவனிக்கணும் என கேட்கிறார். அவருக்கும் குடும்பத்தினர் நிறைய பிரச்சனை எப்ப வெளியே வரலாம்னு பார்த்துட்டு இருக்கார் என ராதிகா கூறுகிறார். அப்படினா அவரை வெளியே வர சொல்லு நீ கல்யாணம் பண்ணிக்க என கூறுகிறார். ராதிகா அதை நான் எப்படி சொல்ல முடியும் என கூறுகிறார். நான் சொல்வதை யோசிச்சு பாரு என அவருடைய அம்மா கூறுகிறார். இத்துடன் முடிகிறது இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட்.

இதனைத் தொடர்ந்து வெளியான புரோமோ வீடியோவில் பாக்கியா கோபியும் ரிசப்ஷனில் இருக்க அதனை நேரில் பார்த்து விடுகிறார் ராதிகா. இதை கோபியும் பார்க்கிறார். அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை பொருத்திருந்து பார்க்கலாம்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.