ஜெனிக்கு ஆறுதல் சொல்கிறார் பாக்கியா.
Baakiyalakshmi Serial Episode Update 05.11.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. நடந்து முடிந்த பிரச்சனைகளை தொடர்ந்து பாக்கியா ஜெனிக்கு போன் செய்து ஆறுதல் கூறுகிறார். செழியன் உன்னை ரொம்ப மிஸ் செய்கிறான். அதை எப்படி சொல்றதுன்னு தெரியாம தான் இதையெல்லாம் செய்கிறான். நீ அவனை வெறுத்து விடாதே. நீ சீக்கிரம் வீட்டுக்கு வரணும். எல்லோரும் சந்தோஷமா இருக்கணும் நீயும் செழியனும் நல்லபடியாக வாழணும் என பாக்கியா கூறுகிறார்.
சில நேரங்களில், இது பிரச்சினையாக இருக்கிறது : ரோகித் சர்மா
இதனையடுத்து கோபி அவரது அம்மாவிடம் பேசிக்கொண்டிருக்கும் நேரத்தில் உறவினர் வந்து அவர்களது மகளின் ரிசப்ஷனுக்கு பத்திரிக்கை வைக்கின்றனர். பின்னர் நேராக ராதிகா வீட்டிற்குச் சென்று ராதிகாவிற்கு பத்திரிக்கை வைக்கின்றனர்.
இந்தப் பக்கம் பார்க்கில் எழில் மற்றும் அமிர்தா இருவரும் அமர்ந்து அடுத்த படத்தின் கதையை பற்றி விவாதித்துக் கொண்டிருக்கின்றனர். படத்தில் வரும் காதல் குறித்து எழில் சொல்ல இதெல்லாம் காதலே கிடையாது என கூறுகிறார். காதல்னா ரெண்டு பேரும் வளரணும். காதலர் பக்கத்துல இருந்தாலும் இல்லனாலும் நம்மை பாதுகாப்பாக உணர வைக்க வேண்டும் என அமிர்தா கூறுகிறார். இதனைக் கேட்ட எழில் கைத்தட்டி உற்சாகப்படுத்துகிறார். பிறகு அமிர்தா வீட்டிற்கு கிளம்பியதும் எழில் தன்னுடைய காதலை கூடிய சீக்கிரம் சொல்லப் போவதாக எழில் தன்னுடைய நண்பரிடம் கூறுகிறார்.
Annaatthe VS Enemy : Public Review | Rajinikanth, Vishal, Arya, Nayanthara
இந்தப் பக்கம் ராதிகாவின் மகள் மய்யூ அவருடைய பாட்டியுடன் அமர்ந்து கேம் விளையாடிக் கொண்டிருக்கிறார். இங்கே இருந்த அம்மா ஏதாச்சும் சொல்லிட்டே இருப்பாங்க அவங்க நம்பர் உள்ள போய் விளையாடலாம் என பாட்டியை கூட்டிக் கொண்டு ரூமிற்கு செல்கிறார் மய்யூ. இந்த நேரத்தில் கோபி வீட்டிற்கு வருகிறார். பின்னர் ராதிகா கோபிக்கு தன்னுடைய அம்மாவை அறிமுகப்படுத்தி வைக்கிறார். இத்துடன் முடிகிறது இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட்.
இதனைத் தொடர்ந்து வெளிவந்த ப்ரோமோ வீடியோவில் ராதிகாவிடம் அவருடைய அம்மா 9 மணிக்கு ஒரு ஆம்பள வீட்டுக்கு வந்து போறது நல்லாவா இருக்கு என கேட்கிறார். இந்தப் பக்கம் கோபியின் அப்பா நீ ஆபீஸ்ல இருந்தா வர என எல்லோர் முன்னாடியும் கேட்கிறார். கோபி ஆமாம் என சொல்ல நான் காபிஸ்கேப் போன் பண்ணி இருந்தேன் நீ அங்கு இல்லையே என அவருடைய அப்பா சொல்கிறார்.