அம்மாவை இனியா வீட்டுக்கு பாக்கியா வர முடியாது என உறுதியாக கூறிவிடுகிறார்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இன்றைய எபிசோடில் எழில் அம்மா வீட்டுக்கு வருவாங்களா மாட்டாங்களான்னு தெரியல அவங்க ரொம்ப வருத்தத்தில் இருக்காங்க என்ன முடிவு எடுக்கப் போறாங்கன்னு தெரியல என சொல்ல ஈஸ்வரி அது எப்படி அவ வராமல் இருப்பா. கோபி பண்ணது தப்புதான் அதை நான் நியாயப்படுத்தி பேச விரும்பல. ஆனா அதுக்காக அவ வீட்டுக்கு வராம இருப்பாளா? அவ இல்லாம நாம எல்லோரும் எப்படி இருக்கிறது என சொல்ல இனியா நான் போய் அம்மாவை கூப்பிடுறேன் என கூறுகிறார்.
அம்மாவை கூப்பிட போன இனியா பாக்யாவிடம் சென்று நீ வீட்டுக்கு வாமா நீ இல்லாம வீடு நல்லா இல்ல இனிமே நீ அப்பா கூட பேச வேண்டாம் யாரும் இல்லையே படுத்துக்க நீ என்னை என்ன திட்டினாலும் பரவாயில்லை நான் எதுவும் சொல்ல மாட்டேன். என பாக்கியாவை திரும்பத் திரும்ப அழைக்க பாக்கியா நான் வரமாட்டேன் அந்த வீட்டுக்கு இனியும் நான் வந்தால் அது செத்துப் போனதுக்கு சமம் என கூற இதனால் இனியா அழுது புலம்பி அங்கிருக்கும் பொருட்களை எடுத்து உடைத்து வீட்டிற்கு கிளம்பி விடுகிறார். பிறகு ஜெனி உங்களுக்காக நான் இருக்கிறேன் என சொல்லிவிட்டு வீட்டிற்கு கிளம்புகிறார்.
வீட்டுக்கு வந்த இனியா தாத்தா பாட்டி இடம் அம்மா வரமாட்டேன்னு சொல்லிட்டாங்க என சொல்லி அழுகிறாள். ஜெனி இப்போதைக்கு வரலன்னு தான் சொன்னாங்க என விளக்கம் அளிக்கிறாள். பிறகு எழில் மேலே இருந்து கீழே வரும் போது கோபியை பார்த்து இதெல்லாம் நடக்க கூடாது அது தான் உங்ககிட்ட இதெல்லாம் வேண்டாம் என சொன்னேன். ஆனா இப்போ உங்களுக்கு சந்தோஷமா? என கேட்கிறார்.
இனியா அழுது புலம்ப ஈஸ்வரி பாக்யா வந்து வாழ வேண்டும் என சொல்ல ஜெனி அவர்களுக்கு கொஞ்சம் டைம் கொடுக்க வேண்டும் என சொல்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.