ராதிகாவுடன் பாக்கியாவை நேருக்கு நேராக சந்திக்க உள்ளார் கோபி.
Baakiyalakshmi Episode Update 11.04.22 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியல் இன்றைய எபிசோட்டில் காலையில் எழுந்தவுடன் ராதிகாவிடம் ரொமான்ஸாக கோபி பேசுவதை பாக்கியா பார்த்து விட அதற்கு கோபி பாக்கியா நின்று கொண்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைகிறார்.
நீ என்ன பணீற இங்க, ஓ நைட்டு இங்க தான் தூங்கிணல, காலையிலேயே குளித்து பாத்ரூமை ஈரம் பண்ணிட்டியா என திட்டுவது போல பேசி கொண்டே பாத்ரூமுக்குள் சென்று விடுகிறார். பிறகு கிச்சனில் சமைத்துக் கொண்டிருக்கும் போது ஜெனி வர அவரிடம் டியர்னு யார் யாரையெல்லாம் கூப்பிடுவாங்க என கேட்கிறார். ஜெனி ஒரு விளக்கம் கொடுத்த பிறகே ஈஸ்வரி அந்த காலத்துல படத்தில் எல்லாம் காதலியை தான் டியர் என கூப்பிடுவாங்க.
உன் மாமனார் கூட என்னை அப்படி கூப்பிட்டு இருக்காரு என்று சொல்கிறார். பிறகு எழில் வர இந்த காலத்துல காதலியை தான் அப்படி கூப்பிடுவாங்க என சொல்கிறார். கோவிலுக்குப் போகும்போது ஒரு முப்பத்தி ஆறு வயது இருக்கும் நபர் ஒருவர் போனில் டியர் என சொல்லிக் கொண்டு போனார் என பாட்டியாஸ்ஸ் அல்ல கண்டிப்பா அது அவருடைய பொண்டாட்டியா இருக்காது அவருடைய கேர்ள் ஃப்ரெண்ட் ஆகத்தான் இருக்கும் என எண்ணி சொல்ல பாக்கியா அதிர்ச்சி அடைகிறார்.
இந்தப் பக்கம் எழில் ஆபீஸில் தனது தோழியுடன் பேசிக் கொண்டிருக்க அந்த நேரத்தில் அமிர்தா போன் செய்கிறார். போனில் இந்தப் பெண்ணின் சிரிப்பு சத்தம் கேட்க யாரது என கேட்கிறார். எழில் முதலில் சதீஷ் தான் என சொல்ல சதீஷ் குரல் எப்போ பொம்பள குரலா மாறுச்சு என கேட்க அது என்னுடைய பிரண்டு என எழில் சொல்கிறார். ஆபீஸ் வரிங்களா என கேட்க இல்ல வீட்ல வேலை இருக்கு என அமிர்தா சொல்லிவிடுகிறார். ஆனால் கொஞ்ச நேரத்தில் ஆபீசுக்கு வந்து கேட்கிறார் அமிர்தா. எழிலில் ஃப்ரண்ட் ஸ்கிரிப்ட் சூப்பரா இருக்கு என எழில் கையைப்பிடித்து பேசுவதைப் பார்த்து அமிர்தா கடுப்பாகிறார். அதன் பின்னர் அந்தப் பெண் டீ குடிக்க வெளியே சென்றதும் அமிர்தாவும் டைப்பிங் செய்ய சென்று விடுகிறார். சதீஷ் எழிலிடம் அமிர்தாவுக்கு அந்த பொண்ணு வேலைக்கு வந்தது பிடிக்கவே இல்லை. அந்த பொண்ணு என்கிட்ட பேசனு கடுப்பேத்துறாங்க என சொல்ல எழில் சந்தோஷப்படுகிறார்.
இந்தப் பக்கம் ராதிகா பாக்யாவுக்கு போன் செய்து சாப்பாடு ரெடி ஆயிடுச்சா நேரா அங்க டெலிவரி பண்ணி விடுறீங்களா என்று கேட்கிறார். நீங்களும் வரீங்களா பாக்கியா கேட்க ஆமா கண்டிப்பா நானும் வருவேன் அவரும் வருவார் என சொல்கிறார். சரி வாங்க இன்னைக்கு கண்டிப்பா வரை பார்க்கலாம் என ராதிகா சொல்லி விட்டு போனை வைத்து விடுகிறார்.
பிறகு கோபி ராதிகா வீட்டுக்கு வர ராதிகா கோபியிடம் சாப்பாடு கொடுக்க போவதைப் பற்றி சொல்கிறார். மேலும் உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்கு என சொல்ல கோபி என்ன அது என கேட்க டீச்சர் தான் என ராதிகா அதிர்ச்சி கொடுக்கிறார். எனக்கு நிறைய வேலை இருக்கு அவங்கள பார்த்து பேச நேரம் கிடையாது என சொல்கிறார் கோபி. டீச்சரை பாக்கணும்னா எதையாவது சொல்லி எஸ்கேப் ஆகறீங்க. இன்னைக்கு எப்படி மிஸ் ஆகறீங்கனு பார்க்கலாம் என ராதிகா சொல்லிவிட்டு உள்ளே செல்ல இன்னைக்கு தான் கிளைமாக்ஸா மெத்தேன், என்ன நடக்கப் போகுதோ என புலம்புகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.