எழில் அமிர்தா காதல் பற்றிய விஷயத்தை ஈஸ்வரியிடம் போட்டு உடைத்துள்ளார் செழியன்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இன்றைய எபிசோட் அசோசியேசன் மீட்டிங் முடிந்தது வீட்டுக்கு வரும் பாக்கியா செல்வியை திட்டிக் கொண்டே வருகிறாள். வீட்டுக்கு வந்ததும் அங்கு நடந்த விஷயத்தை சொல்ல ஜெனி சூப்பர் ஆன்ட்டி நீங்க எலக்சன்ல நில்லுங்க என சொல்ல ஈஸ்வரி அதெல்லாம் வேண்டாம் நீ நிக்காத பாக்கியா என கூற பாக்யா நான் நிக்க மாட்ட நாளைக்கு போயிட்டு நான் நிக்கலன்னு உறுதியா சொல்லிடுவேன் என கூறுகிறார்.

அடுத்து பாக்கியா எழிலுடன் பேங்கிற்கு சென்று கேன்டீன் ஆர்டர் எடுப்பதற்காக 7 லட்சம் ரூபாய் லோன் கேட்கிறார். இரண்டு நாட்கள் கழித்து வருமாறு சொல்லி அனுப்புகின்றனர். பின்னர் இந்த பக்கம் தாத்தா இனியா மற்றும் மயூராவிற்கு கதை சொல்லிக் கொண்டிருக்க அப்போது வரும் ராதிகா இன்னைக்கு யாரையாவது ஸ்பெஷலாக சமைக்க வேண்டும் என பிரியாணி சமைக்கிறார்.

இந்த பக்கம் செழியன் ஜெனிக்கு ஆப்பிள் கட் செய்து கொடுத்து கொண்டிருக்க அப்போது வரும் எழிலிடம் ஈஸ்வரி எதுக்குடா இப்படி தாடியை செய்யும் வச்சுகிட்டு இருக்கேன் நல்லாவே இல்லை என திட்டிக் கொண்டிருக்க போன் வந்ததும் எழுந்து செல்கிறார். அதன் பிறகு செழியன் காதல் தோல்வி என கோர்த்து விட உண்மையாகவே வா என ஈஸ்வரி கேட்க ஆமாம் அவனுக்கு ஒரு பொண்ணு மேல இன்ட்ரஸ்ட் இருக்கு என சொல்லி அமிர்தா தான் அந்த பொண்ணு என்ற உண்மையை உடைக்க ஈஸ்வரி அதிர்ச்சி அடைகிறார்.

ஒரு காலமும் நான் இதுக்கு சம்மதிக்க மாட்டேன் அவங்க ரெண்டு பேரையும் சேர விடமாட்டேன் என ஈஸ்வரி உறுதியாக கூறுகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.