Pushpa 2

ராதிகா வீட்டிற்குச் சென்ற கோபி, கோபப்பட்ட ஈஸ்வரி, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்..!

ராதிகா வீட்டிற்கு கோபிசெல்ல ஈஸ்வரி கோபமாகியுள்ளார்.

baakiyalakshimi serial today episode update 31-12-2024
baakiyalakshimi serial today episode update 31-12-2024

தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் கோபி ராதிகாவிடம் போக வேண்டாம் என்று சொல்லியும் ராதிகா முடிவில் உறுதியாக இருக்க சரி எந்த இடத்திலாவது இருக்கப் போற என்று சொல்லு என்று கேட்க ஆபீஸ் பக்கத்துல தான் போகப் போறோம் என்று சொல்லி அட்ரஸ் கேட்கிறார் பிறகு ராதிகா அதையும் கொடுக்க கொஞ்ச நேரத்தில் கேப் வர ராதிகா அங்கிருந்து கிளம்புகிறார்.

மறுபக்கம் ஈஸ்வரி நான் போய் கோபியை பார்க்க போறேன் என்று கிளம்ப கோபி எதிரில் வந்து நிற்கிறார் எதுவும் பேசாமல் அமைதியாக வர என்னாச்சு கோபி திருப்பியும் சண்டை போட்டாலும் உனக்கு நெஞ்சு வலிக்குதா அதெல்லாம் ஒரு பொம்பளையா பொறுமையே கிடையாது என்றெல்லாம் பேச கோபி அவ பக்கமும் நியாயம் இருக்குதும்மா அவ பேசினும்போது ஒவ்வொரு வார்த்தையும் நெஞ்சிலே ஈட்டி வச்சு கிழிச்ச மாதிரி இருந்தது. அதற்கு ஈஸ்வரி அவர் சின்ன பொண்ணு வச்சிருக்கா வேலைக்கு போற உன்னை எப்படி பார்த்துக்க முடியும் 24 மணி நேரமும் கூட ஒரு ஆளு இருக்கணும் அதனால தான் நான் உன்னை இங்க கூட்டிட்டு வந்தேன் என்று சொல்லுகிறார்.

அதுமட்டுமில்லாமல் அவ போனா போகட்டும் விடு என்று சொல்ல இனியா நாங்கல்லாம் உங்களுக்கு இருக்கும் டாடி நீங்க கவலைப்படாதீங்க என்று சொல்லுகிறார். உடனே பாக்யா அவங்க போறேன்னு சொன்ன உடனே போகட்டும்னு விட்டுட்டீங்களா? அவங்க மனசு உடைஞ்சி இருக்காங்க இந்த நேரத்துல நீங்க அவங்களுக்கு ஆறுதலா இருக்கணும் இங்க வந்திருக்கக் கூடாது என்று சொல்ல ஈஸ்வரி உன்னால சும்மா இருக்க முடியாதா என்று கோபப்படுகிறார். உடனே கோபியை எழுப்பி ரூமுக்கு போகலாம் என்று கூப்பிடுகிறார். கோபியும் எதுவும் பேசாமல் அமைதியாக எழுந்து செல்ல பாக்யா இது மாதிரி உங்க பசங்க பண்ணா உங்களால பாத்துட்டு சும்மா இருக்க முடியுமா என்று கேட்கிறார். செழியன் ஜெனியையும் எழில் அமிர்தாவையும் சரியா பாத்துக்கலனா உங்களுக்கு எப்படி இருக்கும் என்று கேட்கிறார் இது மட்டும் இல்லாமல் இனியாவ கல்யாணம் பண்ணிக்க போறவன் இது மாதிரி பண்ணா பார்த்துகிட்டு சும்மா இருப்பீங்களா என்று கேட்க கோபி அதிர்ச்சியாகி நிற்கிறார்.

ஈஸ்வரி அவ எதாவது பேசிகிட்டு இருப்பா நீ உள்ள வாக்கு என்று அழைக்க,உடனே கோபி ஈஸ்வரியிடம் நான் ராதிகாவை பார்க்க போறோமா என்று சொல்லுகிறார். அதெல்லாம் ஒன்னும் வேணாம் கோபி என்று ஈஸ்வரி போயிட்டு வந்துரமா என்று சொல்லிவிட்டு கிளம்புகிறார். இனியா ஈஸ்வரிஇடம் திரும்ப வந்துருவாருள்ள பாட்டி என்று கேட்க எனக்கு எப்படி தெரியும் அனுப்பி வச்சாலே அவளை கேளு என்று சொல்லுகிறார்.

பாக்கியா இனியாவை படிக்க சொல்லி அனுப்பி விட, அவனுக்கு உடம்பு சரியில்லைன்னு கூட உனக்கு பரிதாபம் இல்ல இல்ல என்று கேட்க அதெல்லாம் பார்க்க வேண்டிய நேரத்துல பார்த்தாச்சு போதும் என்று சொல்லுகிறார். நீ நல்லவன்னு நெனச்ச ஆனா சமயம் பார்த்து பழி வாங்குற இல்ல என்று கேட்க நாளா பழிவாங்கல பழி வாங்க ஆரம்பிச்சா நீங்க தாங்க மாட்டீங்க என்று சொல்லுகிறார்.

மறுபக்கம் ராதிகாவும் மயூவும் சோகமாக உட்கார்ந்து கொண்டிருக்க கோபி வருகிறார்.மயூ என்ன சொல்லுகிறார்?கோபியின் பதில் என்ன?ராதிகா என்ன முடிவு எடுக்கப் போகிறார்? என்பதை இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

baakiyalakshimi serial today episode update 31-12-2024
baakiyalakshimi serial today episode update 31-12-2024