பொண்ணு பார்க்க வந்த மாப்பிள்ளையை ஓட ஓட விரட்டி உள்ளார் வெண்பா.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இன்றைய எபிசோடில் மாப்பிள்ளையிடம் தனியாக பேசவேண்டும் என அழைத்துச் சென்ற வெண்பா சாந்தியை வைத்து தனக்கு போன் செய்ய வைத்து ஆண் நண்பர்களுடன் பேசுவது போல டிராமா போடுகிறார். ஒரு கட்டத்தில் வாந்தி எடுக்க என்னாச்சு என கேட்க போன மாசம் பிரண்ட் ஒருத்தனோட கோவா போயிருந்தேன். அங்கே அப்படி இப்படின்னு இருந்தோம். அதான் கர்ப்பம் ஆகிவிட்டேன் நினைக்கிறேன். நீ ஒன்னும் கவலைப்படாதே. எனக்கு எத்தன பாய்பிரெண்ட் இருந்தாலும் புருஷனா அது நீ மட்டும் தான் இது உன் மேல சத்தியம் என சொல்ல இதைக் கேட்ட மாப்பிள்ளை உடனே தன்னுடைய அப்பா அம்மாவை அழைத்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பி விடுகிறார்.

அதன் பின்னர் மருத்துவமனையில் பாரதி சக்தியின் உடல்நிலை குறித்து விசாரிக்கிறார். அந்த நேரத்தில் கண் விழித்த சக்தி பாரதிக்கு நன்றி கூறுகிறார். பிறகு கண்ணம்மாவின் பெயரை சொல்ல நர்ஸ் ஓடிச்சென்று கண்ணம்மாவை அழைத்துவர இருவருக்கும் மீண்டும் நன்றி கூறுகிறார் சக்தி. ஆயிஷாவின் பெற்றோர் சக்தியை பார்க்க மருத்துவமனைக்கு வருகின்றனர். சக்தியின் அப்பா இனி இவங்களும் எங்களைப்போல உனக்கு அப்பா அம்மா தான் என சொல்ல இருவரையும் அம்மா அப்பா என சக்தி அழைக்கிறார். இதைக்கேட்டு ஆயிஷாவின் பெற்றோர் மகிழ்ச்சி அடைகின்றனர்.

அதன் பின்னர் சக்தியை பெற்றோர் பாரதிக்கு நன்றி கூறுகின்றனர். பிறகு அவர் இது எங்களுடைய கடமை என சொல்லிவிட்டு அவர்களை அழ கூடாது என கூறிவிட்டு அங்கிருந்து கிளம்ப பின்னர் கண்ணம்மா வந்ததும் அவருக்கு நன்றி கூறுகின்றனர். இந்த ஆபரேஷன் நல்லபடியாக நடந்து முடிய முக்கியமான காரணம் நீங்க தான் உங்கள என்னைக்கு என் வாழ்நாளில் மறக்க மாட்டோம். நீங்களும் உங்கள் குழந்தைகளும் நூறு வருஷம் நல்லா இருக்கணும் என கூறுகிறார்.

இந்த பக்கம் வெண்பா சாந்தியை கட்டியணைத்து முத்தம் கொடுத்து சொன்ன மாதிரியே கரெக்டா பண்ணிட்ட என சந்தோஷப்படுகிறார். எத்தனை மாப்பிள்ளை வந்தாலும் ஓட ஓட விரட்டுவேன் பாரதியை தான் நான் கல்யாணம் பண்ணிக்குவேன் என சபதம் போடுகிறார். பிறகு வெண்பா பாட்டு போட்டு உற்சாகமாக ஆட்டம் போட்டுக் கொண்டிருக்க அந்த நேரத்தில் அவருடைய அம்மா வந்து விடுகிறார்.

உடனே வெண்பா வருத்தத்தில் இருப்பது போல டிராமா போட நாளைக்கு உன்னை பொண்ணு பார்க்க வேறு ஒரு மாப்பிள்ளை வராங்க ஆனா இந்த வீட்டோட வாஸ்து சரியில்லைன்னு நினைக்கிறேன் அதனால ஹோட்டலில் வைத்து பொண்ணு பாக்க வராங்க என கூறுகிறார். இதைக் கேட்ட வெண்பா அதிர்ச்சி அடைந்து உனக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலை நானே எனக்கு பிடித்த மாதிரி மாப்பிள்ளையை பார்த்து கொள்கிறேன் என கூறுகிறார். உனக்காக ஆயிரம் மாப்பிள்ளை பார்த்தேன் இதில் எனக்கு என்ன கஷ்டம் இருக்கிறது என கூறுகிறார்.

பிறகு சர்மிளா அங்கிருந்து கிளம்பியதும் வெண்பா எத்தனை மாப்பிள்ளை வேணாலும் பாருங்க, ஆனா நான் பாரதியை தான் கல்யாணம் பண்ணிக்குவேன் என சொல்லிக் கொள்கிறார். இத்துடன் இன்றைய பாரதிகண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.