Browsing tag

life

அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்: ரஜினி அறிக்கை..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திரையுலகிற்கு அறிமுகமாகி 50 ஆண்டுகள் ஆகிறது. இதனை முன்னிட்டு பல்வேறு அரசியல் பிரமுகர்கள், திரையுலக நண்பர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வந்தார்கள். இதற்கு அனைவருக்கும் ரஜினி நன்றி தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் ரஜினிகாந்த், ‘அனைவருக்கும் 79-வது சுதந்திர தின நல்வாழ்த்துகள். எனது 50 ஆண்டு கால திரையுலகப் பயணத்தை ஒட்டி என்னை மனமார வாழ்த்திய என் நண்பரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் […]

நடன இயக்குநரால் அவமானப்பட்டேன்: இஷா கோபிகர் கண்ணீர்..

அரவிந்த் சாமி, இஷா கோபிகர் நடித்த சின்ன சின்ன மழைத்துளிகள் சேர்த்து வைப்பேனோ’ என்ற பாடல் பிரபலம் என்பது தெரிந்ததே. ‘காதல் கவிதை’ படத்தில் பிரசாந்த் ஜோடியாகவும் நடித்திருந்தார். இந்நிலையில், தென்னிந்திய நடன இயக்குநர் ஒருவர் தன்னை அவமானப்படுத்தியதாக இஷா கோபிகர் தற்போது பகிர்ந்துள்ளார். இது பற்றிப் பார்ப்போம்.. இஷா கோபிகர் வெளிப்படையாக பேசுகையில், ‘தென்னிந்திய படங்களில் ஒன்றில், நான் என் சினிமா வாழ்க்கையை தொடங்கியிருந்தேன். இது நான் பாலிவுட்டில் நுழைவதற்கு முன்பு நடந்த சம்பவம். நான் […]

நான் கர்ப்பமாக இருந்தபோது ஒரு தயாரிப்பாளர் மோசமாக நடந்துகொண்டார்: ராதிகா ஆப்தே குற்றச்சாட்டு..

நடிகை ராதிகா ஆப்தே 2012-ஆம் ஆண்டு இசையமைப்பாளர் பெனடிக்ட் டெய்லரை மணந்தார். முன்னதாக,2011-ல் லண்டனில் இருந்தபோது இருவரும் சந்தித்தனர். அந்த அறிமுகம் காதலாக மலர்ந்து திருமணத்தில் முடிந்தது. கடந்த ஆண்டு அவருக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் ‘தான் கர்ப்பமாக இருந்தபோது தயாரிப்பாளரிடமிருந்து ஆடம்பர வசதிகள் எதையும் எதிர்பார்க்கவில்லை என்றும், கொஞ்சம் அனுதாபம் மட்டுமே எதிர்பார்த்ததாகவும் ராதிகா குறிப்பிட்டுள்ளார். ராதிகா கடைசியாக ‘சிஸ்டர் மிட்நைட்’ என்ற படத்தில் நடித்தார். இந்த படம் 2025 மே 30 […]

ரசிகர்களை என் சுயலாபத்துக்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் நெகிழ்ச்சி..

‘தல’ அஜித்குமார், சினிமாவில் அடியெடுத்து வைத்து 33 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘சினிமா எனும் அற்புதமான பயணத்தில் 33 வருடங்கள் நிறைவு செய்கிறேன். ஆனால், இதைக் கொண்டாடுவதற்காக எழுதவில்லை. எனக்கு எண்களின் மீது நம்பிக்கை இல்லை. சினிமாவில் ஒவ்வொரு வருடமும் எனக்கு முக்கியமானதுதான். இந்தப் பயணத்துக்காக முழுமனதுடன் கைகூப்பி நன்றி தெரிவிக்கிறேன். இந்தப் பயணம் எனக்கு எளிதாக இல்லை. இந்தத் துறைக்கு எந்தப் பின்புலமோ அல்லது யாருடைய […]

ரஜினி எழுதும் சுயசரிதை பற்றி, இயக்குநர் லோகேஷ் விழிப்புணர்வு தகவல்கள்..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், படப்பிடிப்பின் நடுவில் கிடைக்கும் ஓய்வு நேரங்களில் தன் சுயசரிதையை எழுதும் பணியில் ஈடுபட்டு வருகின்றார் என லோகேஷ் தெரிவித்தார். மேலும் அவ்வப்போது என்ன எழுதிக்கொண்டு இருக்கின்றேன் என லோகேஷிடம் ரஜினி தெரிவிக்கின்றார். இது குறித்து லோகேஷ் கனகராஜ் பகிர்ந்த தகவல் தற்போது வைரலாகி வருகின்றது. ‘ரஜினி சார் சொல்லும் விஷயங்கள் வியக்கத்தக்க வகையில் இருக்கும். அவர் சொல்லிய விஷயங்களில் இருந்து மிக முக்கியமான ஒரு விஷயத்தை கற்றுக்கொண்டேன். அதுமட்டுமல்லாமல், கண்டிப்பாக ரஜினியின் சுயசரிதையை […]

3 வருடங்கள் அவமானப்பட்டேன், அசிங்கப்பட்டேன்: இயக்குநர் பாண்டிராஜ் உருக்கம்..

கடைக்குட்டி சிங்கம், நம்ப வீட்டுப் பிள்ளை என அடுத்தடுத்து வெற்றிப் படங்களை கொடுத்த இயக்குநர் பாண்டிராஜ், சூர்யாவை இயக்கும் வாய்ப்பினை பெற்றார். முன்னதாக, சூர்யாவின் தயாரிப்பில் ‘பசங்க-2’ மற்றும் ‘கடைக்குட்டி சிங்கம்’ என இரு படங்களை இயக்கியிருந்தார். இதில் ‘பசங்க-2’ படத்தில் சூர்யாவும் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார். இதனைத்தொடர்ந்து, தன்னை வைத்து படமெடுக்கும் வாய்ப்பினை பாண்டிராஜிற்கு தந்தார் சூர்யா. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூர்யா-பாண்டிராஜ் கூட்டணியில் உருவான ‘எதற்கும் துணிந்தவன்’ படம் பெரிய ஹைப்பில் வெளியானது. ஆனால், […]

யார் யாரை மறைமுகமாக சாடுகிறார் ஜி.வி.பிரகாஷ்?

பாடகி சைந்தவியை காதலித்து திருமணம் செய்து, ஒரு மகளுக்கு தந்தையான இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் திடீரென அவரை பிரிவதாக அறிவித்தார். சைந்தவியும் அதனையே அறிவித்தார் என்பது தெரிந்ததே. இதற்கு நடிகை திவ்யபாரதிதான் காரணம் எனவும் தகவல் வெளியாகி, பின்னர் மறுக்கப்பட்டது. நடிகராகவும் முத்திரை பதித்து வரும் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் தற்போது ‘பிளாக்மெயில்’ படம் வெளியாகவுள்ளது. இந்நிலையில், அவர் தெரிவித்த தகவல் வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. ‘நான் நிறைய பேருக்கு உதவி செய்வேன். அவர்களில் சிலர் என்னை ஏமாற்றி […]

நான் ஏன் சினிமாவிற்கு வந்தேன் தெரியுமா?: விஜய் சேதுபதி ஓபன் டாக்..

தமிழ் சினிமாவில், பல படங்களில் வில்லனாகவும், சிறப்புத் தோற்றத்திலும் நடித்து வந்த விஜய் சேதுபதி, இனி ஹீரோவாக மட்டுமே நடிப்பதாக முடிவெடுத்திருக்கிறார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர், ஹீரோவாக மட்டும்தான் நடிப்பேன் என முடிவெடுத்த பிறகு அவரது நடிப்பில் வெளியான மகாராஜா, மற்றும் ‘தலைவன் தலைவி’ ஆகிய படங்கள்வசூலில் சாதனை செய்து வருகின்றன. இந்நிலையில் விஜய் சேதுபதி கூறியதாவது, ‘நான் எல்லா வேலைகளையும் செய்து பார்த்தேன். எதுவும் சரியாகக் கைகூடவில்லை. துபாயில் வேலை செய்துகொண்டிருந்தபோது அதிக சம்பளம் […]

சூர்யா முதல் இடத்தில் இருக்கிறார்: ஸ்டண்ட் சிவா பெருமிதம்..

பா. ரஞ்சித் தற்போது ‘வேட்டுவம்’ என்ற படத்தினை இயக்கி வருகிறார். ஆர்யா, கெத்து தினேஷ், அசோக் செல்வன் உள்பட பலர் நடித்து வருகின்றனர். இப்படத்தின் ஷுட்டிங் சமயத்தில் மோகன்ராஜ் என்ற சண்டை பயிற்சியாளர் உயிரிழந்துள்ளார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. ஸ்டண்ட் கலைஞர் மோகன்ராஜ் உயிரிழந்ததை தொடர்ந்து, பாலிவுட் நடிகர் அக்‌ஷய்குமார், சண்டை பயிற்சியாளர்களுக்கு மருத்துவ காப்பீடு திட்டம் எடுத்து கொடுத்தது தொடர்பான செய்திகள் வெளியாகி இணையத்தில் வைரல் ஆனது. ரூ. 5 […]

அந்த 3 நாட்களும் எனக்கு வித்தியாசமான அனுபவமாக இருந்தது: சமந்தா ஓபன் டாக்..

நடிகை சமந்தா, தற்போது தயாரிப்பாளராகி இருக்கிறார். இவர், ‘சுபம்’ என்ற தெலுங்கு திரைப்படத்தை தயாரித்திருந்தார். அந்த திரைப்படம் தியேட்டரில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்றது. அந்த பாடத்தை தொடர்ந்து சமந்தா ‘மா இண்டி பங்காரம்’ என்ற படத்தை தயாரித்து அதில் கதையின் நாயகியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், இயக்குனர்கள் ராஜ் மற்றும் டி.கே. இயக்கும் ஒரு ஹிந்தி வெப் தொடரிலும் நடித்து வரும் சமந்தா, மூன்று நாட்கள் செல்போனை பயன்படுத்தவில்லை என்ற, தகவலை […]