Browsing tag

awards

விருது வருது: இன்று’அங்கம்மாள்’ கீதா கைலாசம்; நாளை ‘தாய் கிழவி’ ராதிகா..

நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ள ‘தாய் கிழவி’ படம் வருகிற 27-ந்தேதி வெளியாகிறது. இப்படத்தில் நடித்துள்ள ராதிகாவுக்கு சிறந்த நடிகைக்கான விருது கிடைக்கும் என திரைப் பிரபலங்கள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இயக்குநர் கே.பாலசந்தரின் மருமகளும், நடிகையுமான கீதா கைலாசம் நடிப்பில், சமீபத்தில் ‘அங்கம்மாள்’ படம் வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது. இந்த படத்தில் ஜாக்கெட் அணியாத கிராமத்து மூதாட்டி கதாபாத்திரத்தில் கீதா கைலாசம் அசத்தியிருந்தார். அவருக்கு சிறந்த நடிகைக்கான ‘காய்ப்’ சினிமா விருது வழங்கப்பட்டு […]

சிறந்த நடிகர்கள் சூர்யா, விஜய் சேதுபதி, தனுஷ்: தமிழ்நாடு அரசின் விருதுகள் அறிவிப்பு..

2016-ஆம் ஆண்டு முதல் 2022-ஆம் ஆண்டுகளுக்கான தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள் மற்றும் 2014-ஆம் ஆண்டு முதல் 2022-ஆம் ஆண்டுகளுக்கான சின்னத்திரை விருதுகளை பிப்ரவரி 13ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் விழாவில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கிச் சிறப்பிக்கிறார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில், ‘தமிழ்நாடு அரசின் சார்பில், சமுதாயச் சிந்தனைகளுடன் கூடிய மனித நல்லுணர்வுகளைப் பிரதிபலிக்கும் திரைப்படங்களை ஊக்கப்படுத்தும் வகையில், சிறந்த தமிழ்த் திரைப்படங்கள், […]

பாலா அண்ணனின் ஆசையை சீக்கிரமே நிவர்த்தி செய்கிறேன்: சசிகுமார் பதிவு..

சமீபத்தில் நடைபெற்ற சென்னை சர்வதேசத் திரைப்பட விழாவில் ‘டூரிஸ்ட் பேமிலி’ படத்துக்காக சிறந்த நடிகர் என்ற விருதினை பெற்றார் சசிகுமார். இதற்காக இயக்குநர் பாலா சசிகுமாருக்கு கடிதமொன்றை எழுதியிருக்கிறார். அக்கடிதத்தில், ‘சென்னை சர்வதேசத் திரைப்படவிழாவில் ’டூரிஸ்ட் பேமிலி’ திரைப்படத்திற்கு நீ சிறந்த நடிகனாக விருது வாங்கியிருப்பதை அறிந்தவுடன் ஏற்பட்ட என் மன வெளிப்பாடுதான் இக்கடிதம். கடந்த இருபத்தைந்து வருடங்களாக உன்னைப் பற்றி நான் கணித்தது நீ போராடி வெல்பவன். பேராற்றல் கொண்டவன். கொந்தளிக்கிற கடலையும் அமிழ்த்திச் சாந்தமாக்கி […]

‘கிராண்ட் ஃபாதர்’ படம் குறித்து எம்.எஸ்.பாஸ்கர் அப்டேட்ஸ்..

ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கி வெளியான ”பார்க்கிங்’ படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக தேசிய விருது பெற்றார் எம்.எஸ்.பாஸ்கர். இதனைத் தொடர்ந்து அவர் நடிக்கும் படம் பற்றிப் பார்ப்போம்.. குட்டி ஸ்டோரீஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வந்த படம் ‘கிராண்ட் ஃபாதர்’. இதில் எம்.எஸ்.பாஸ்கர் மற்றும் ஃப்ராங்க் ஸ்டார் ராகுல் இருவரும் பிரதான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இதன் படப்பிடிப்பை ஒரே கட்டமாக சென்னை மற்றும் புதுச்சேரி சுற்றியுள்ள பகுதிகளில் 45 நாட்களில் நடத்தி முடித்துள்ளது படக்குழு. ஃபேன்டஸி, ஆக்‌ஷன், […]

அனைத்து மக்களையும் அமீரகம் அரவணைக்கிறது: ஏ.ஆர்.ரகுமான் பேச்சு..

ஏழு தேசிய விருதுகள், இரண்டு ஆஸ்கர் விருதுகள் பெற்று உலகளவில் புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான். இந்நிலையில், அமீரக தேசிய தினம் நாளை செவ்வாய்க்கிழமை சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு அபுதாபி அல் வத்பா பகுதியில் ஷேக் ஜாயித் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவின் ஒரு பகுதியாக ஏ.ஆர்.ரகுமானின் சிறப்பு இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், அமீரகத்திற்காக இசையமைத்த ‘ஜமால் அல் இத்திகாத்’ என்ற சிறப்பு பாடல் வெளியிடப்பட்டது. அமீரகத்தின் நிறுவன தந்தை என போற்றப்படும் […]

20-ந்தேதி இந்திய திரைப்பட விழா நிகழ்ச்சியில், ரஜினிக்கு கவுரவம்..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வெளியான ‘கூலி’ படத்தை தொடர்ந்து தற்போது நெல்சன் இயக்கத்தில் ‘ஜெயிலர்-2’ படத்தில் இணைந்துள்ளார். இப்படத்தை முடித்துவிட்டு, சுந்தர்.சி இயக்கத்தில் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் நடிக்கவுள்ளார். இதனையடுத்து ரஜினி-கமல் இணையும் படம் தொடங்கவுள்ளது. இப்படத்தை நெல்சன் இயக்கவிருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கோவாவில், 56-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா, வரும் நவம்பர் 20-ந்தேதிமுதல் நவம்பர் 28-ந்தேதி வரை நடைபெறவுள்ளது. இந்தியத் திரைப்பட விழாக்களில் முதன்மையான இவ்விழாவில் நாட்டின் முக்கிய […]

விருதுகள் எல்லாம் பைத்தியக்காரத்தனம்: விஷால் ஆவேஷம்

தற்போது ‘மகுடம்’ என்ற படத்தில் விஷால் நடித்து வருகிறார். இப்டத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. இதன் முதற்கட்ட படப்பிடிப்பிலேயே நாயகன் விஷால் – இயக்குநர் ரவி அரசு இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் சில காட்சிகளை விஷாலே இயக்கி வந்தார். இதனைத் தொடர்ந்து படத்தில் உள்ள நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் பேசி இருவருக்கும் இடையே பிரச்சினையை சரி செய்தார்கள். பின்பும் விஷால் – ரவி அரசு இருவருக்கும் பிரச்சினை ஏற்பட்டுக் கொண்டே இருந்திருக்கிறது. இதனால் […]

கமலுக்கு உயரிய விருது; பிரகாஷ்ராஜ் தலைவராக தேர்வு: முழு விவரம்..

கமல்ஹாசனுக்கு உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது. இது பற்றிய தகவல்கள் பார்ப்போம்.. திரையுலகில் கமல்ஹாசன் பங்களிப்பைக் கவுரவிக்கும் விதமாக, அவருக்கு அல்பர்ட்டா இந்திய திரைப்பட விழா 2025 நிகழ்ச்சியில், ‘கோல்டன் பீவர் அவார்ட்’ என்ற உயரிய விருது வழங்கப்பட்டு உள்ளது. இந்திய சினிமாவுக்கு அவர் ஆற்றியுள்ள சாதனைகளையும், பங்களிப்பையும் கொண்டாடும் வகையில் கனடாவில் இந்த விருது வழங்கப்பட்டு உள்ளது. தேசிய விருதுகள், பிலிம்பேர் விருதுகள் எனப் பல விருதுகளைக் குவித்துள்ள கமல்ஹாசன், 2014 ஆம் ஆண்டு இந்திய அரசால் […]

சினிமா எனக்கு எல்லாம் கொடுத்திருக்கிறது: விக்ரம் பிரபு பெருமிதம்..

தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தால் வழங்கப்படும் கலைமாமணி விருதை தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த விருது பல ஆண்டுகளாக இயல், இசை, நாடகக் கலைக்கு சேவை செய்த கலைஞர்களின் பங்களிப்பை பாராட்டி வழங்கப்படுகிறது. அவ்வகையில், கடந்த 2021, 2022, 2023 என மூன்று ஆண்டுகளுக்கான கலைமாமணி விருது, அறிவிக்கப்பட்டு உள்ளது. அதில் திரைத்துறையை பொறுத்தவரையில், நடிகர்கள் எஸ்.ஜே.சூர்யா, விக்ரம் பிரபு, மணிகண்டன், நடிகை சாய் பல்லவி, இயக்குநர் லிங்குசாமி, சண்டை பயிற்சியாளர் சூப்பர் சுப்பராயன், பாடகி […]

ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் தேவாவுக்கு மரியாதை; கவுரவிப்பு..

தமிழ் சினிமாவில் கானா பாடல்களால் தனித்த முத்திரை பதித்தவர் இசையமைப்பாளர். மேலும் இவரது இசையமைப்பில் வெளியான பாட்ஷா, அருணாச்சலம், ஆசை, வாலி, நேருக்கு நேர், குஷி, காதல்கோட்டை போன்ற படங்களின் பாடல்கள் ரசிகர்களால் இன்றும் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் தேவா சமீபத்தில் ஆஸ்திரேலியா சென்றிருந்தார். அவர் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் கவுரவிக்கப்பட்டு உள்ளார். இதுகுறித்து தேவா கூறும்போது, ‘செப். 24-ந்தேதி ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் மிகுந்த மரியாதையுடன் என்னை வரவேற்றனர். அவைத்தலைவர் இருக்கையில் அமர வாய்ப்பு அளிக்கப்பட்டது. பின்னர் மரியாதைக்குரிய செங்கோல் […]