குழந்தை மற்றும் கணவருடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் ரித்திகா.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் அமிர்தா என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் ரித்திகா தமிழ்ச்செல்வி.
சமீபத்தில் இவருக்கு திருமணம் ஆன நிலையில் திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து சீரியலில் நடித்து வந்தார் ஆனால் சில மாதங்களில் அவர் சீரியலில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தார்.
பிறகு நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டிருந்த நிலையில அவருக்கு பலரும் வாழ்த்துக்களை குவித்து வந்தனர்.பிறகு பெண் குழந்தை பிறந்தது என்று அறிவிப்பை தவிர மற்றபடி எந்தவித புகைப்படங்களும் அப்டேட்களும் கொடுக்காமல் இருந்தார்.
ஆனால் தற்போது குழந்தை மற்றும் கணவருடன் விதவிதமான போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.