குடும்பத்துடன் காமாட்சி அம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்துள்ளார் பாக்கியலட்சுமி சீரியல் ரித்திகா.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பாக்கியலட்சுமி சீரியலில் அமிர்தா என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் ரித்திகா தமிழ்ச்செல்வி. இவருக்கு சீரியல் நடித்திருந்தபோது திருமணமான நிலையில் மீண்டும் சீரியலில் நடிக்க தொடங்கினார் ஆனால் பாதியிலேயே மீண்டும் விலகி இருந்தார் இந்த சீரியல் முடிவுக்கு வந்ததும் குறிப்பிடத்தக்கது.
தற்போது இவருக்கு நிலா என்ற ஒரு பெண் குழந்தை இருப்பது குறிப்பிடத்தக்கது. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் குழந்தையுடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்த நிலையில் தற்போது இவர் கணவர் மற்றும் குழந்தையுடன் சேர்ந்து காஞ்சி காமாட்சியம்மன் கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்துள்ளார் இந்த புகைப்படங்களை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு அதில் காஞ்சி காமாட்சியின் மண்ணில் என்று பதிவிட்டு உள்ளார்.
இவரின் இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் பலரும் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.