பாக்கியலட்சுமி சீரியல் குறித்து கோபி பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் கோபி என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் சதீஷ். இவரது நடிப்புக்கென தனி ரசிகர்கள் இருந்து வருகிறார்கள்.
1200 எபிசோடுகளை தாண்டி இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இது மட்டுமில்லாமல் இந்த சீரியல் விரைவில் முடிவுக்கு வரவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்நிலையில் கோபி கதாபாத்திரத்தில் நடித்த வரும் cஅவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்துடன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், காலை வணக்கம்.. பாக்கியலட்சுமி என்ற பப்ளிக் எக்ஸாம் முடியும் நேரம் நெருங்கி விட்டது.நான் பாசா இல்லை பெயிலா என்பது ரசிகர்கள் என்ற உங்கள் கையில் இருக்குது. மனதிலும் உடலிலும் சோர்வடைந்து விட்டேன். முயற்சிகள் தொடரும் ஒரு நாள் நடிகன் என்ற இலக்கை அடைய இன்னும் என் பயணம் தொடரும்.. நன்றி.. வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார்.
இவரின் இந்த பதிவால் பாக்கியலட்சுமி சீரியல் முடிவுக்கு வரவுள்ளதா என்ற கேள்வியும் ரசிகர்கள் மனதில் தோன்றியுள்ளது.