America : அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் ஐபோன் ஹேக் செய்து தகவல்களை திருடி விட்டதாக சீனா மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
உலகிலேயே அமெரிக்க அதிபர்களுக்கு தான் பாதுகாப்பு வசதிகள் அதிகம் அளிக்கப்பட்டு வருகிறது.
ஆனால், சில நாட்களுக்கு முன்பு அமெரிக்க அதிபருக்கே கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அவரது ஐபோன் மூலம் தான் அவருக்கு பாதுகாப்பு பிரச்சனை ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது.
பொதுவாக, அமெரிக்க அதிபர்கள் யாரும் அவர்களது தனிப்பட்ட செல் போன்களை பணிகளுக்கு பயன்படுத்துவதில்லை.
தனிப்பட்ட பணிகளுக்காக அவர்களது ஐபோன்களை பயன்படுத்தினாலும், அலுவலக பணிகளுக்கு சேட்டிலைட் போன்களை மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் , அமெரிக்க அதிபர் டிரம்ப் சேட்டிலைட் போன்களை எப்போதாவது தான் பயன்படுத்துகிறார் என குற்றம் சாடியுள்ளனர் .
அரசு பணிகளுக்கும் அவர் தனது சொந்த ஐபோன் பயன்படுத்துகிறார் என்றும், அவரது ஐபோனில் சில பாகங்கள் சீனாவில் தயாரானது ஆகையால் சீனா அமெரிக்க அதிபரின் உரையாடலை ஹேக் செய்து திருடி இருக்கலாம் என கருதப்படுகிறது.
இது குறித்து டிரம்ப் கூறுகையில், அலுவலகத்தில் இனி அனைவரும் அரசு கொடுத்த சேட்டிலைட் போன்களை பயன்படுத்துமாறு கேட்டுக் கொண்டார் மற்றும் அவரது போன் ஹேக் செய்யப்பட்டதாக கூறும் தகவலை மறுத்துள்ளார்.