நடிகர் அஜித் விக்னேஷ் சிவன் கதையை கிடப்பில் போட்டதற்கான காரணம் தெரியவந்துள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விளங்கி வருபவர் அஜித். இவரது நடிப்பில் வெளியான துணிவு திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வெற்றியை பெற்றது. இந்தப் படத்தைத் தொடர்ந்து இவர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக உள்ள படத்தில் நடிக்க இருப்பதாக அறிவிப்பு வெளியானது.

ஆனால் இந்த படம் தற்போது அடுத்த கட்டத்திற்கு நகராமல் அப்படியே இருக்கிறது. விக்னேஷ் சிவன் கதைக்கு பதிலாக அஜித் வேறு ஒரு இயக்குனரின் கதையில் நடிக்க இருப்பதாகவும் அதற்காக நான்கு இயக்குனர்கள் போட்டி போட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகின.

இப்படியான நிலையின் அஜித் விக்னேஷ் சிவன் கதையை கிடப்பில் போட்டதற்கான காரணம் என்ன என தெரிய வந்துள்ளது. தளபதி 67 படத்துக்கு போட்டியாக இந்த படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருப்பதன் காரணமாக விக்னேஷ் சிவனின் சாப்டான கதை மோதலுக்கு ஒத்து வராது என முடிவெடுக்கப்பட்டு இருப்பதாக தெரிய வந்துள்ளது.

அதுமட்டுமல்லாமல் படத்தில் பட்ஜெட் அதிகமாக இருப்பதன் காரணமாகவும் தயாரிப்பு நிறுவனம் இந்த படத்தின் மீது தயக்கம் காட்டுவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.