After married Candlestick – திருமணம் முடிந்தவுடன் முதன்முதலாக மணப்பெண்ணை பிறந்த வீட்டிலிருந்து புகுந்த வீட்டிற்கு அழைத்து செல்லும் பொழுது முதலில் புகுந்த வீட்டினர் குத்துவிளக்கை ஏற்ற சொல்கின்றனர்.
குத்துவிளக்கில் உள்ள ஐந்து முகங்கள் ஐந்து கடவுள்களையும் குறிக்கிறது. அன்பு, அறிவு, பொறுமை, உறுதி, நிதானம் போன்ற ஐந்து நல்ல குணங்களை தான் குத்துவிளக்கில் உள்ள ஐந்து முகங்களும் குறிக்கிறது.
தீரன் பாணியில் உருவாகும் த்ரிஷா படம் – வெளிவந்த சூப்பர் தகவல்!
குத்துவிளக்கின்,
1) தாமரைப் போன்ற பீடம் – பிரம்மாவை குறிக்கிறது
2) தண்டு பகுதி – விஷ்ணுவை குறிக்கிறது
3) நெய் எறியும் அகல் – சிவனை குறிக்கிறது
4) தீபம் – திருமகளை குறிக்கிறது
5) சுடர்–கலைமகளை குறிக்கிறது.
அமலா பாலின் சர்ச்சைக்குரிய படத்தின் தற்போதைய நிலை என்ன தெரியுமா?
எனவே திருமணம் முடிந்து புகுந்த வீட்டிற்கு செல்லும் ஒரு பெண் குத்துவிளக்கினை ஏற்றி வைத்து குத்து விளக்கில் இருக்கும் ஐந்து தெய்வங்களையும் வணங்கி, குத்துவிளக்கில் ஐந்து முகங்களில் இருக்கும் நற்பண்புகளையும் தாம் நிலைநாட்டி, அந்த குடும்பத்தை பிரகாசமாக ஒளி வீச செய்வேன் என்று உறுதியளிப்பதாக குத்துவிளக்கை ஏற்ற சொல்கிறார்கள்.