நடிகை மீரா மீது அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளது தமிழ் சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Actress Meera Mitun Arrested : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் மீரா மிதுன். தன்னைத்தானே சூப்பர் மாடல் என கூறிக்கொண்டு மற்றும் நடிகைகள் தன்னுடைய முகத்தை காப்பி அடிப்பதாக குற்றம்சாட்டி வருகின்றார்.
இருக்கும் இடத்தில் இருந்தே வழிபடலாம், ‘கங்கா ஸ்நானம்’ : வழிமுறைகள்..
மேலும் இவர் சமீபத்தில் பாடகி தீ என்னுடைய முகத்தை காப்பி அடிப்பதாக கூறி அவரை திட்டித் தீர்த்தார். அதுமட்டுமல்லாமல் பட்டியலில் பிரபலங்களை அடித்து சினிமாவை விட்டு விரட்ட வேண்டும் என கூறினார்.
பட்டியலின மக்கள் பற்றி அவதூறாக பேசியதால் இவர் மீது ஏழு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணைக்கு நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் விசாரணைக்கு ஆஜராகாததால் மீரா மிதுனை கைது செய்ய போலீஸார் திட்டமிட்டனர்.
BIGG BOSS 5-ல் பங்கேற்கும் போட்டியாளர்கள் – வெளியான FULL LIST.!
என்னை கைது செய்வது என்பது முடியாத ஒன்று. அது கனவில் தான் நடக்கும் என கூறி தலைமறைவாகி இருந்தார். இந்த நிலையில் தமிழக போலீசார் அவரை கேரளாவில் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் தமிழ் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.