தற்கொலைக்கு முயன்ற ஜெயஸ்ரீ மகளின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சின்னத்திரையில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் ஜெயஸ்ரீ. இவர் சீரியல் நடிகர் ஈஸ்வரை திருமணம் செய்து கொண்டு தற்போது அவர்களுக்கிடையே பிரிவு ஏற்பட்டு விட்டது.
இந்த பிரச்சனையால் சில வாரங்களுக்கு முன்னர் ஜெயஸ்ரீ தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதனால் அவரின் மகள் ரேத்வாவின் நிலை என்ன என்ற கேள்வி அனைவர் மனதிலும் எழுந்திருந்தது. தற்போது அதற்கு வீடியோ ஒன்றின் மூலமாக பதில் கிடைத்துள்ளது.
ஆம், ரேத்வா விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ள பொம்முக்குட்டி அம்மாவுக்கு என்ற சீரியலில் நடித்து வருகிறார். அதற்கான ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
குடும்ப பிரச்சனையில் குழந்தையை நடிக்க வைக்க தொடங்கி விட்டார்களே என்ற அதிர்ச்சி தான் அனைவரிடம் ஆட்கொண்டுள்ளது.
நம்ம பொம்மியோட அலப்பறை ஆரம்பம்! ????
பொம்முக்குட்டி அம்மாவுக்கு – இன்று மதியம் 2 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BommukuttyAmmavukku #VijayTelevision pic.twitter.com/Fg99yn8zWu
— Vijay Television (@vijaytelevision) February 4, 2020