சூர்யாவின் ‘ரெட்ரோ’ படத்துடன் சந்தானத்தின் ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ மோதல்?
‘பட்ஜெட் முக்கியமல்ல, நல்ல ஸ்கிரிப்ட் தான் வெற்றிக்கு வித்திடும்’ என்ற நம்பிக்கையில் இதோ வெளியாக இருக்கிறது சந்தானம் நடித்த திரைப்படம்..
அதாவது, சந்தானம் நடிப்பில் உருவாகி வந்த ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டது.
முன்னதாக சந்தனம் நடிப்பில் கடந்த 2016-ம் ஆண்டு வெளியானது ‘தில்லுக்கு துட்டு’. இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு, இதன் 2-ம் பாகம் 2019-ம் ஆண்டு ரிலீஸானது. தொடர்ந்து இந்த படத்தின் 3-ம் பாகமாக வெளியான ‘டிடி ரிட்டன்ஸ்’ படம் வரவேற்பை பெற்றது. இந்த படத்தை இயக்குனர் பிரேம் ஆனந்த் இயக்கியிருந்தார்.
மீண்டும் பிரேம் ஆனந்த் இயக்கத்தில், சந்தானம் நடித்து வரும் திரைப்படம் ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’. இந்த படத்தில் கௌதம் மேனன், செல்வராகவன், மொட்டை ராஜேந்திரன், கஸ்தூரி, யாஷிகா ஆனந்த், கீர்த்திகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வரவேற்பை பெற்றதை தொடர்ந்து, இப்படம் மே மாதம் ரிலீஸாகும் என புதிய போஸ்டரோடு சந்தானம் பிறந்த நாள் அன்று அறிவித்தது.
இந்நிலையில், தற்போது படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதாக, படக்குழு புகைப்படம் வெளியிட்டு அறிவித்துள்ளது.
‘டிடி நெக்ல்ஸ் லெவல்’ திரைப்படம் மே 1-ந்தேதி ரிலீஸாகலாம் என கோலிவுட் வட்டாரம் தெரிவிக்கிறது. இதே நாளில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்த ‘ரெட்ரோ’ படமும் ரிலீஸாக உள்ளது. மேலும், அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ படமும் எதிர்பார்க்கப்படுகிறது.