Web Ads

தனுஷின் 55-வது படக்கதை என்ன?: இயக்குனர் ராஜ்குமார் அப்டேட்

தனுஷ் நடிக்கவிருக்கும் படத்தின் கதை குறித்து காண்போம்..

சிவகார்த்திகேயன்-சாய் பல்லவி நடிப்பில் உருவான ‘அமரன்’ பட வெற்றிக்குப் பிறகு இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி தனுஷின் 55-வது படத்தை இயக்க உள்ளார்.

தற்போது தனுஷ், பாலிவுட்டில் ஆனந்த் எல்.ராய் இயக்கும் ‘தேரே இஷ்க் மேய்ன்’ படத்தில் நடித்து வருகிறார். இப்பட பணிகள் முடிந்ததும் ராஜ்குமார் இயக்கும் படத்துக்கு தேதிகள் ஒதுக்கவுள்ளார்.

இந்நிலையில், ராஜ்குமார் தெரிவிக்கையில், ‘தனுஷ் 55’ படத்தின் முன் தயாரிப்பு பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இன்னும் 6 மாதங்களில் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டுள்ளோம்.

படத்தின் கதை பற்றி குறிப்பிட வேண்டுமென்றால், ‘நம்முடைய அன்றாட வாழ்க்கைக்கு உள்ளேயே இருக்கக் கூடிய பலரை பற்றிய கதை இது. ஆனால், இப்படியெல்லாம் ஆட்கள் இருக்கிறார்களா என்று நாம் உணர்வதே இல்லை.

ஆனால், நம்முடைய இயல்பு வாழ்க்கை இயல்பாக இயங்கிக் கொண்டே இருப்பதற்கு இவர்கள் எல்லாம் மிக முக்கியமான காரணம்.

அப்படிப்பட்ட மனிதர்கள் நிறைய பேர் நம்முடைய கண்ணுக்கு தெரியாமல் நமக்கிடையே உள்ளனர். அவர்களுக்கான ஒரு பிரதிநிதித்துவமாக இந்த படம் இருக்கும்’ என கூறினார்.

அவ்வகையில், இது ஆக்‌ஷன் படமா? காதல்படமா? குடும்பப் படமா? அல்லது ஆக்‌ஷன்+காதல் கலந்த குடும்ப படமா? என பொறுத்திருந்து பார்ப்போம்.