Web Ad 2

தவெக மாநாட்டில் விஜய் பேசிய ‘கூத்தாடி’ பேச்சுக்கு, அதிமுக முன்னாள் அமைச்சர் வரவேற்பு..

Web Ads

தளபதி விஜய் தவெக மாநாட்டில் பேசிய வார்த்தைகள் தொடர்ந்து வைரலாய் தெறித்து வருகிறது. விஜய்யின் வார்த்தைகளை அவரவர் கொள்கைகளுக்கு ஏற்ப வரவேற்றும் விமர்சித்தும் வருகின்றனர். அவ்வகையில், அதிமுக முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா கருத்து தெரிவித்ததாவது:

விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு கடந்த ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது. இதில், லட்சக்கணக்கான இளைஞர்கள் பங்கேற்றது பெரும் பேசு பொருளானது. மேலும், விஜய்யின் பேச்சும் அணுகு முறையும் வித்தியாசமாக இருந்தது. அப்போது பேசிய விஜய், ‘கூத்தாடி’ என்பதற்கு ஆவேசமாக விளக்கம் அளித்தார்.

‘கூத்து என்பது மக்களோடும் மண்ணோடும் கலந்த ஒன்று என்றும், கூத்தாடி என்ற பெயர் நமக்கு மட்டும் வந்ததில்லை. நம்ம தமிழ்நாட்டு வாத்தியார் எம்ஜிஆர், ஆந்திராவில் அவங்க ஊர் வாத்தியார் என்.டி.ஆர். ஆகியோர் கட்சி ஆரம்பித்தபோது கூட கூத்தாடி கூத்தாடி என்றுதான் கூறினார்கள்.

அவர்களையே அப்படிக் கூப்பிடும்போது, நம்மை கூப்பிடாமலா இருப்பார்கள்? என்றும் கேள்வி எழுப்பினார்.

சினிமா என்றால் பாட்டு, ஆட்டம், பொழுதுபோக்கு தானா? என்றும் கேள்வி எழுப்பிய விஜய், தமிழகத்தின் கலை, இலக்கியம், வாழ்வியல் பண்பாடு தான் சினிமா என்றும் பொழுதுபோக்குக்கான காரணத்தையும் தாண்டி, சமூக அரசியல் புரட்சிக்கான பவர்ஃபுல் ஆயுதம் தான் சினிமா என்றும் கூறினார்.

திராவிட இயக்கமெல்லாம் சினிமாவை வைத்துத் தான் வளர்ந்தது என்றும், கூத்தாடி என்றால் கேவலமான பெயரா கெட்ட வார்த்தையா? என்றும் கேள்வி எழுப்பினார்.

‘கூத்து’ என்பது சத்தியத்தைப் பேசும் என்றும் சாத்தியத்தைப் பேசும் என்றும் ஆவேசமாக கூறிய விஜய், கூத்து என்பது கொள்கையைப் பேசும், கோட்பாட்டைப் பேசும், கோபத்தைப் பேசும், அரசியலைப் பேசும், அறிவியலைப் பேசும், நல்லதைப் பேசும், உள்ளதைப் பேசும், உண்மையைப் பேசும், உணர்வோடு பேசும் என அடுக்கி தள்ளினார்.

‘கூத்து’ ஒரு கொண்டாட்டம் என்றால் கூத்தாடி கொண்டாட்டத்தின் குறியீடு என்றும் கூறிய விஜய் கூத்தாடி நினைத்த செயலை செய்து முடிக்கும் வரை நெருப்பு மாதிரி தான் இருப்பான் என்றும் கூறினார். விஜய் கூத்தாடி குறித்து பேசியது பெரு வரவேற்பை பெற்ற நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா, விஜய்யின் கூத்தாடி விளக்கத்தை புகழ்ந்துள்ளார்.

இதுதொடர்பாக, அதிமுக முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா தெரிவிக்கையில், ‘விஜய்யுடன் கூட்டணி அமைப்பது குறித்து கட்சியின் பொதுச் செயலாளர்தான் முடிவு செய்வார்’ என்றார்.

மேலும், விஜய் காப்பி அடித்தார் என்பதை ஏற்க முடியாது என்று கூறிய கோகுல இந்திரா, கூத்தாடிக்கு விஜய் கொடுத்த விளக்கம் பிடித்திருந்தது.

மக்களை மகிழ்விப்பவர்கள் தான் கூத்தாடிகள் என விஜய் கூறியது சரிதான்’ என்ற கோகுல இந்திரா, ‘திமுக எப்போதும் வென்றான்’ என்ற நிலையில் இருந்ததில்லை என்றும் வெறுங்கையை வைத்துக்கொண்டு எல்லாம் இருக்கிறது என திருமாவளவன் கூறி வருகிறார் எனவும் விமர்சித்தார்.

முன்னதாக, விஜய்யின் தவெக கட்சிக்கு.. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வரவேற்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

vijays explanation for koothadi is extradinary says admk gokula indira
vijays explanation for koothadi is extradinary says admk gokula indira