வனிதாவின் மகள் தான் கடத்தப்பட்டதாக கொடுக்கப்பட்ட புகார் குறித்து வாக்குமூலம் கொடுத்துள்ளார், அவர் கைப்பட எழுதிய வாக்குமூலம் காப்பி சமூக வளையதளங்களில் வைரலாக தொடங்கியுள்ளது.
Vanitha Daughter Statement : பிக் பாஸ் போட்டியாளராக உள்ளே சென்றுள்ள வனிதா தன்னுடைய மகளை கடத்தி விட்டதாக இரண்டாவது கணவர் ஆனந்த ராஜ் புகார் அளித்திருந்தார்.
அந்த புகாரின் பேரில் வனிதா கைது செய்யப்படலாம் என்ற தகவலும் வெளியாகி இருந்தது, நேற்று மாலை வெளியான ப்ரோமோ வீடியோவிலும் வனிதா கண்ணீர் விட்டு ரேஷ்மாவிடம் அழுவது போல கட்டப்பட்டு இருந்தது.
தற்போது அந்த கண்ணீற்கு என்ன காரணம்? அவரின் மகள் அப்படி என்ன வாக்குமூலம் கொடுத்தார் என்ற விவரங்கள் தெரிய வந்துள்ளன.
வணிதாவிடம் விசாரணை நடந்ததும் போலீசார் கடத்தப்பட்டதாக கூறும் ஜோவிதாவிடம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றுள்ளனர்.
அதில் ஜோவிதா நான் என் விருப்பத்துடன் தான் அம்மாவுடன் வந்தேன், நான் தான் அம்மாவிற்கு போன் செய்து என்னை அழைத்து செல்லுமாறு கூறினேன்.
அதன் பின்னர் தான் அம்மா காரில் வந்து என்னை கோவை அழைத்து சென்றார், அதன் பிறகு எங்களது அத்தை வீட்டில் தங்கி இருந்தோம்.
அப்பாவுடன் இருக்க எனக்கு பிடிக்கவில்லை, அப்பாவின் நண்பர்கள் அடிக்கடி வீட்டிற்கு வருகின்றனர், அதனால் தான் நான் அம்மாவிடம் வந்து விட்டேன்.
உண்மையாகவே சரவணன் இப்படி தான் – முதல் மனைவி அதிரடி பேட்டி.!
மேலும் நானும் அக்காவும் தற்போது அப்பார்ட்மெண்ட் ஒன்றில் உள்ளோம், எங்களை அத்தை பார்த்து கொள்கிறார். வேலையாட்களும் உள்ளனர் என அந்த வாக்கு மூலத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இதனால் வனிதாவின் கணவர் ஏமாற்றத்துடன் தெலுங்கானா திரும்பி சென்றுள்ளார். வனிதாவும் எவ்வித பிரச்னையும் இல்லாமல் பிக் பாஸ் வீட்டிற்குள் போட்டியாளராக தொடர்ந்து இருப்பார்.
மகளின் வாக்கு மூலம் தனக்கு சாதமாக இருந்ததால் தான் வனிதா ரேஷ்மாவை கட்டி அணைத்து கொண்டு கண்ணீர் விட்டுள்ளார் என்பது இந்த வாக்குமூலத்தில் மூலமாக தெரிய வருகிறது.
இதன் உண்மை தன்மை முழுவதுமாக இன்றைய நிகழ்ச்சியில் தெரிந்து விடும், அதுவரை பொறுத்திருந்து பார்ப்போம்.