இனி சூர்யாவின் படத்தை ரிலீஸ் செய்ய மாட்டோம் என தியேட்டர் உரிமையாளர்கள் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Suriya and Jyothika Movie : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் பல படங்களை தயாரித்து வெளியிட்டு வருகிறார்.
இவரது 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பொன்மகள் வந்தாள்.
ஜோதிகா நடித்துள்ள இந்தப்படத்தில் பாக்யராஜ், பார்த்திபன், பிரதாப் போத்தன் என கிட்டத்தட்ட பிரபலமான ஐந்து இயக்குனர்கள் நடித்துள்ளனர். இன்னும் பல நடிகர் நடிகைகளும் இணைந்து நடித்துள்ளனர்.
ரிலீசுக்கு தயாராக உள்ள இந்தப் படத்தை ஊரடங்கு உத்தரவால் வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் நேரடியாக ஆன்-லைனில் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
என் கரியரில் இது பெஸ்ட் படமா இருக்கும் – பப்ஜி படம் பற்றி பேசிய ஐஸ்வர்யா தத்தா.!
இதற்காக வியாபாரம் பேசி முடிக்கப்பட்டு அமேசான் பிரைம் வீடியோ வெளியிட ரூபாய் 9 கோடிக்கு விற்பனை செய்துள்ளதாக கூறப்படுகிறது.
படம் உருவானது நாலரை கோடி தான்.தற்போது 9 கோடிக்கு வியாபாரம் செய்யப்பட்டிருப்பதால் படக்குழுவினருக்கு நல்ல லாபம் என கூறுகின்றனர்.
இருப்பினும் இது விநியோகஸ்தர் மற்றும் தியேட்டர் உரிமையாளர்களை நசுக்கும் செயல் என்பதால் இனிமேல் சூர்யாவின் படத்தையும் சூர்யா தயாரிக்கும் படத்தை தியேட்டரில் ரிலீஸ் செய்ய மாட்டோம் என தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் முடிவு எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.
இதனால் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள சூரரைப்போற்று படத்திற்கு பெரிய சிக்கல் உருவாகியுள்ளது. அடுத்து என்ன செய்யப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.