Web Ad 2

விஜயா சொன்ன வார்த்தை, பதிலடி கொடுத்த மீனா, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

Web Ads

விஜயா சொன்ன வார்த்தைக்கு மீனா பதிலடி கொடுத்துள்ளார்.

SiragadikkaAasai Serial Today Episode Update 24-04-25
SiragadikkaAasai Serial Today Episode Update 24-04-25

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனா அழுது கொண்டு இருக்க முத்து மீனாவிடம் இருந்து திருட்டு பசங்க பணத்தை அடிச்சுட்டாங்க என்ற விஷயத்தை அண்ணாமலையிடம் சொல்ல அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். போலீஸ் ஸ்டேஷன்ல கம்ப்ளைன்ட் கொடுத்தீங்களா என்று அண்ணாமலை கேட்க கொடுத்து இருக்கோம்பா என்று சொல்லுகிறார்.அது எப்படி வரும் நானே 30 லட்சம் கொடுத்துட்டு கம்ப்ளைன்ட் கொடுத்தா ஒண்ணுமே சொல்லல இது வரைக்கும் கிடைக்கல உங்க ரெண்டு லட்சம் மட்டும் கிடைச்சிருமா என்று மனோஜ் சொல்லுகிறார். அண்ணாமலை மீனாவிற்கு ஆறுதல் சொல்ல மீனா தங்கச்சி சீட்டு போட்டு வச்சிருந்த பணமும் பிரண்டு கிட்ட கடனா வாங்கின பணம் இப்படி போயிடுச்சு மாமா என்று அழுகிறார்.

அண்ணாமலை விஜயாவிடம் உன்னோட நகையே குடு அவங்க கடன் வாங்கி கொடுத்திருக்காங்க என்று சொன்ன அவ திமிர் பிடித்து போய் அந்த சிந்தாமணிக்கு போட்டியா வந்து பெரிய ஆளாகணும்னு பேராசை பட்டா அதுக்கு என்னவோ கொடுக்க முடியுமா என்று கேட்க மீனா கோபப்பட்டு எனக்கு ஒன்னும் எந்த பேராசையும் கிடையாது அது என்ன தேடி வந்த ஆர்டர் நான் ஏத்து செய்யணும்னு நினைச்சா அவ்வளவுதான் என்று சொல்லி வாயை அடக்குகிறார். உடனே இப்ப எதுக்கு ஆன்ட்டி எதிர்த்து பேசிட்டு இருக்கீங்க மீனா என்று ரோகினி கேட்க நான் யார்கிட்டயும் பொய் சொல்லி ஏமாத்தல நகையை வைத்து பொய்யான நகையை எடுத்துட்டு வந்து வைக்கல என்று சொல்ல மூவரும் வாயை மூடி கொள்கின்றனர்.

மீனா எங்களுக்கு யாருடைய நகையும் வேணாமா என்று சொல்ல முத்துவும் ஆமாப்பா ஏற்கனவே அவங்க ஏற்கனவே என்னோட வீடுன்னு சொல்லிக்கிட்டு இருக்காங்க நிம்மதியா சாப்பிட கூட முடியாது அதனால எவ்ளோ கஷ்டத்த தாண்டி மீனா வந்துட்டா இதையும் நாங்களே பார்த்துகிறோம் என்று சொல்லிவிட்டு சென்று விடுகின்றனர். கொஞ்ச நேரத்தில் மீனா குடும்பத்தினர் வர அண்ணாமலை அவரை வரவேற்று நலம் விசாரிக்கிறார் ஆனால் விஜயா வழக்கம்போல் அவர்களை மதிக்காமல் இருக்க மீனா வந்தவுடன் சந்திரா மற்றும் சீதா சத்யா மூவரும் போய் விசாரிக்கின்றனர். மாப்பிள்ளை சின்ன அடி சொன்னாரு இவ்வளவு பெருசா கட்டு போட்டு இருக்காங்களே மீனா என்று கேட்க சீதா ஏன் அவங்களை துரத்திட்டு போன பணம் போனா போது சம்பாதிக்கலாம் உனக்கு ஏதாவது ஆச்சுன்னா என்ன பண்றது என்று கேட்க மீனாவின் அம்மா உனக்கு மட்டும் ஏண்டி இப்படி எல்லாம் ஆகுது என்று கேட்கிறார்.

அண்ணாமலை விஜயாவிடம் அவங்களுக்கு காபி போடு என்று சொல்ல முறைக்கிறார் தண்ணியாவது எடுத்துட்டு வந்து கொடு என்று சொல்ல மீனா போக சீதா நான் போறேன் என்று சொல்லுகிறார் ஆனால் விஜயா ஏற்கனவே ஒருத்தி போய் படாத பாடு படுத்துறா இதுல நீ வரியா என்று சொல்லி விஜயாவே செல்கிறார். பிறகு உட்கார்ந்து என்ன நடந்தது என்று மீனா விடம் கேட்க மீனா நடந்த விஷயங்களை சொல்லி கண்கலங்குகிறார் நீ கஷ்டப்பட்டு சீட்டு போட்டா சீதா அதுவும் இல்லாம உன் பிரண்டு கிட்ட வேற வாங்கி கொடுத்த கண்டிப்பா நான் திருப்பி கொடுத்துவிடுவேன் கொஞ்சம் டைம் கேளு என்று சொல்ல நீ அத பத்தி கவலைப்படாத கானா பாத்துக்குறேன் கொஞ்சம் கொஞ்சமா கூட கொடுத்துக்கிறேன் என்று சொல்ல சத்தியா இன்னும் கொஞ்ச நாள்ல வேலைக்கு போயிட்டு வாங்க அந்த காசு அடைச்சுக்கறேன்னு அத பத்தி கவலைப்படாத என்று சொல்ல அந்த நேரம் பார்த்து முத்து வருகிறார். மண்டபத்தின் அட்ரஸ் கேட்க மீனா விசிட்டிங் கார்டு கொடுக்கிறார்.

அதை வாங்கிக் கொண்டு முத்து சாப்பிட்டு போங்க அத்தை என்று சொல்ல எனது சாப்பிட்டா அவளே சமைக்காம இருக்கா இங்க மட்டும் தான் சாப்பாடு இருக்கு இவங்களுக்கு இல்லை என்று சொல்ல உடனே முத்து கோபப்பட சந்திரா நாங்க கிளம்புறோம் மாப்பிள்ளை என்று சொல்ல அதெல்லாம் இல்லத்தை நான் ஹோட்டல்ல வாங்கி கொடுத்து அனுப்ரா நீங்க சாப்பிட்டு தான் போகணும் என்று சொல்லி சத்யாவை அழைத்து செல்கிறார்.

மறுபக்கம் ரோகினி ஷோரூம்க்கு வர மனோஜ் எதுக்கு இங்க வந்தேன் என்று கேட்கிறார். என் மனோஜ் இப்படி பேசுற, நான் உன் மேல எவ்வளவு பாசம் வச்சிருக்கேன் தெரியுமா உனக்கு உடம்பு சரியில்லைன்னு உப்பு காரம் சேர்க்காமல் சாப்பாடு எடுத்துகிட்டு வந்து இருக்கேன் என்று சொல்ல நீங்க வந்தது அம்மாவுக்கு தெரிஞ்சா பிரச்சனை ஆயிடும் இங்கிருந்து போ என்று சொல்ல ரோகினி என்ன சொல்லுகிறார்? அதற்கு மனோஜ் பதில் என்ன? விஜயா என்ன செய்கிறார்? என்பதை இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

SiragadikkaAasai Serial Today Episode Update 24-04-25
SiragadikkaAasai Serial Today Episode Update 24-04-25