மீனாவை பார்த்து ரோகினி ஒரு விஷயம் சொல்ல முத்து பதிலடி கொடுத்துள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ரோகினி சிட்டி இடம் அந்த பி ஏ வை மிரட்ட சொல்லிக் கொண்டிருக்கிறார் சிட்டி ரோகினி இடம் அந்தாளு உங்க பக்கமே வராத அளவுக்கு பண்ணிடுவேன் ஆனா நீங்க எனக்கு ஒன்னு பண்ணனும் என்று கேட்கிறார் என்ன என்று கேட்க உங்க வீட்ல உங்க மாமியாரோட பணம் திருடு போச்சு ஞாபகம் இருக்கா என்று கேட்க, ரோட்ல போகும்போது யாரோ திருடிட்டு போயிட்டாங்க என்று சொல்ல அது வேற யாரும் இல்ல மீனாவோட தம்பி சத்யா தான் என்று சொல்லுகிறார்.

இந்த விஷயம் முத்துவுக்கும் தெரியும் என்று சொல்ல அதனாலதான் முத்து சத்யாவோட கையை உடைச்சான் என்றும் சொல்லுகிறார். அதனால தான் முத்து மீனா தம்பி மேல கோபமா இருக்காரா என்று ரோகினி சொல்கிறார். ஆமாம் என்று சொன்ன சிட்டி இந்த வீடியோ ஆதாரம் முத்துகிட்ட இருக்கு நீங்க அதை ரிலீஸ் பண்ணனும் என சொல்லுகிறார். அதற்கு சரியான சொல்லிவிட்டு ரோகிணி கிளம்புகிறார்.

ரவி மற்றும் ஸ்ருதி வீட்டுக்கு வர மீனா தலையில் கட்டு போட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து என்னாச்சு என்று கேட்கின்றனர். மீனா என்ன சொல்வதென புரியாமல் இருக்க உடனே முத்து வந்து வாழைப்பழம் தோல் வழுக்கி விழுந்ததாக சொல்கிறார் இதனை கவனித்த அண்ணாமலை என்னிடம் வண்டியிலிருந்து விழுந்ததாக சொன்ன இப்போ தோல் வலிக்கு விழுந்துட்டேன்னு சொல்ற என்ன ஆச்சு ஒழுங்கா சொல்லு என்று கேட்க உடனே அவர் மீனாவிடம் நீ சொல்லுமா என்று சொல்கிறார். முதலில் கீழே விழுந்துட்டேன் என்று சொல்லும் மீனா சுருதி வண்டியில் இருந்தால் தோல்வழுக்கியா என்று கேட்கிறார்.

ஒரு வழியாக மீனா வண்டியிலிருந்து இறங்கி தோல் வழுக்கி விழுந்ததாக சொல்லி சமாளித்து விடுகிறார். ஸ்ருதி மற்றும் மீனா பேசிக் கொண்டிருக்க அந்த நேரம் பார்த்து விஜயா வர உடனே சண்டை போடுவது போல் நடிக்கின்றனர். இது ஒரு சின்ன காயம் இதுக்கு ஏன் இப்படி பண்ணிட்டு இருக்கீங்க என்று சண்டை போட விஜயா அவர் ஒரு நடிப்புக்காரி என்று சொல்லுகிறார். அந்த நேரம் பார்த்து ரோகினி உள்ளே வர கோவிலுக்கு போனதாகவும் அங்கே நேரம் உங்களுக்கு நல்லா இருக்கிறதா சொன்னாங்க ஆன்ட்டி என்று விஜயாவிடம் சொல்லுகிறார். நீங்க நல்லா இருந்தா தான நாங்க நல்லா இருக்க முடியும் என்று சொல்ல முத்து காக்கா பறக்குது என கிண்டல் பண்ணுகிறார்

உடனே மீனா விடம் வந்து மீனா உங்களுக்கு கேட்ட ஆனா உங்களுக்கு கெட்ட நேரம் ஸ்டார்ட் ஆயிடுச்சு என்று சொன்னாங்க வந்தது பார்த்தா உங்க தலையில் அடிபட்டு இருக்கு என்று சொல்லி மீனாவை பயமுறுத்துகிறார். ஸ்ருதி சாமியாரோட நான் நலமா நல்லா இருந்தா அவர் ஏன் கோவில் இருக்க போறாரு இதெல்லாம் எதுக்கு நம்பனும் என்று கேட்க கொஞ்சமாவது நம்பலாம்ல என்று ரோகினி சொல்லுகிறார்.

விஜயா அவங்க எப்படின்னா போகட்டும் விடுமா என் நேரம் நல்லா இருக்குல்ல என்று சொல்லிவிட்டு கிளம்ப முத்துவிடம் காக்கா தொல்லையா இருக்குன்னு சொன்னீங்க இல்ல விரட்டிடுவோம் என்று நக்கலாக பேசிவிட்டு கிளம்புகிறார்.

பிறகு மீனா ரோகினி சொன்ன விஷயத்தை யோசித்து கொண்டு இருக்க பார்லர் அம்மா என்ன கடவுளா நீ அதெல்லாம் யோசிக்காத நல்லதே நினைச்சா நல்லதே நடக்கும் என்று சொல்லுகிறார். எல்லோரும் தூங்கிக் கொண்டிருக்க அந்த நேரம் பார்த்து ரவிக்கு போன் வருகிறது. அவர் ஹோட்டல் ஓனரான நீத்து கால் செய்கிறார். ஒரு ரெசிபி தோணுது அதுக்காக சொல்றதுக்கு கால் பண்ண என்று சொல்ல சுருதி நைட்ல கூட இப்படி தான் தூங்க விடாம பேசிக்கிட்டு இருப்பியா என்று வெளியே துரத்தி விடுகிறார்.

வெளியே வந்து பேச ,முத்து டேய் செஃப் வேற எங்கண்ணா போய் பேசுடா இப்பதான் மீனா தூங்குனா என்று சொல்லுகிறார். நல்ல நேரம் பார்த்து மனோஜ் சத்தமாக ரவியிடம் தண்ணி எடுத்துட்டு வாடா என்று சொல்லுகிறார். உடனே முத்து ஓடுகாலி மெதுவா பேசுடா என்று சொல்லுகிறார். மனோஜ் ரவி இடம் சொல்ல நான் போன் பேசிக்கிட்டு இருக்கேன்ல நீயே பொறுத்து கொண்டு செல்ல குடு நான் போன் பேசுறேன் என்று வாங்க போடா என்று சொல்லி அனுப்பி வைக்கிறார்.

பிறகு சுருதி எழுந்து வந்து ரவியை திட்டி விட்டு செல்கிறார். மறுநாள் காலையில் மீனா எல்லோருக்கும் டிபன் செய்து கொண்டிருக்க அந்த நேரம் பார்த்து முத்து கிச்சனுக்கு வந்து உன்ன தான் எந்த வேலையும் செய்ய வேணாம்னு சொன்னேன் இல்ல, என்று சொல்ல வேற யாரு செய்வாங்க நான் சமைச்சுட்டு பூ கொடுக்க போனோம் என்று சொல்லுகிறார். அதெல்லாம் தேவையில்லை என்று சொல்ல அதெல்லாம் நாலு மணிக்கு எழுந்து கட்டிட்டேன் என்று சொல்லுகிறார்.

கிச்சனுக்கு ஸ்ருதி வர, முத்துவும் மீனாவும் என்ன பேசிக் கொள்கிறார்கள்? அதற்கு ஸ்ருதி என சொல்லுகிறார்? என்று இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.