சைபர் கிரைமில் பண மோசடி.. வருத்தத்துடன் சீரியல் நடிகர் மிர்ச்சி செந்தில் வெளியிட்ட வீடியோ..!
சைபர் கிரைமில் பணம் மோசடி செய்துள்ளதாக வருத்தத்துடன் மிர்ச்சி செந்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

சின்னத்திரையில் நடித்து பிரபலமானவர் மிர்ச்சி செந்தில். இவர் விஜய் டிவியில் சரவணன் மீனாட்சி, நாம் இருவர் நமக்கு இருவர் போன்ற பல சீரியல்களில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளார்.
இவர் தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் அண்ணா சீரியல் நடித்து வருகிறார். தற்போது இவர் சைபர் கிரைமில் பணம் இழந்து விட்டதாக வருத்தத்துடன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவருக்குத் தெரிந்த நபரின் whatsapp நம்பரில் இருந்து 15 ஆயிரம் பணம் கேட்டிருந்ததாகவும் டிரைவிங்கில் இருந்ததால் நான் அந்த நம்பருக்கு பணம் அனுப்பி விட்டேன். அதன் பிறகு தான் வேறு ஒரு பெயர் அதில் இருந்ததை நான் பார்த்தேன் அது பற்றி போன் பண்ணி விசாரித்த போது அவர் தனது whatsapp ஹேக் செய்த விஷயத்தையும் இதே போல் 500 பேர் இன்று காலை போன் செய்ததாகவும் அவர் கூறியிருக்கிறார்.
அப்போதுதான் சைபர் கிரைமில் பணத்தை இழந்து விட்டேன் என தெரியவந்தது பிறகு போலீசில் புகார் அளித்திருப்பதாகவும் கூறியுள்ளார்.
View this post on Instagram