சொந்த தயாரிப்பிலேயே, நடிகை சமந்தா தொடர்ந்து நடிக்க முடிவு..
தனக்கேற்ற கதாபாத்திரங்களில் நடிகை சமந்தா தொடர்ந்து நடிக்கவுள்ளார். இது குறித்த தகவல்கள் காண்போம்..
அல்லு அர்ஜுன் நடிப்பில் அட்லீ இயக்கும்ர படத்தில் சமந்தா நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், அந்த படத்தில் தான் நடிக்கவில்லை என்பதை சமந்தா கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் நயன்தாரா ஏற்கனவே தனது கணவருடன் இணைந்து ‘ரவுடி பிக்சர்ஸ்’ எனும் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். அதேபோல ஜோதிகா தனது கணவர் சூர்யாவுடன் இணைந்து 2டி நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
இந்நிலையில், நடிகை சமந்தாவும் புதிதாக ‘Tralala Moving Pictures’ (த்ராலாலா) எனும் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி ‘சுபம்’ எனும் படத்தை தயாரித்து முடித்துள்ளார்.
பிரவீன் கண்ட்ரேகுலா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம் இன்று வெளியானது. சமந்தா ஏற்கனவே அட்லி இயக்கத்தில் தெறி மற்றும் மெர்சல் ஆகிய படங்களில் நடித்த நிலையில், அட்லீ தற்போது இயக்கும் படத்தில் நடிக்கவில்லை அறிவித்துள்ளார்.
இந்நிலையில், அட்லீ இயக்கும் படத்தில் மிருணாள் தாகூர் அல்லது ஜான்வி கபூர் நடிக்கலாம் என கூறப்படுகிறது. முன்னதாக ‘மா இன்டி பங்காரம்’ படத்தில் சமந்தா நடிக்கப் போவதாக கடைசியாக கடந்த ஆண்டு அவரது பிறந்த நாளை முன்னிட்டு கையில் துப்பாக்கியுடன் சேலை கட்டிய குடும்பப் பெண்ணாக சமந்தா போஸ் கொடுத்திருந்தார். ஆனால், கடந்த ஒரு வருடமாக அந்த படம் ஆரம்பிக்கவே இல்லை.
தனது தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் அந்த படம் உருவாகவுள்ள நிலையில், விரைவில் ‘பங்காரம்’ படத்தின் ஷூட்டிங் தொடங்கும் என்றும், அதுதான் சமந்தா நடிக்கும் அடுத்த படம் என கூறப்படுகிறது.
எதிர்பார்த்த கேரக்டராக புதிய பட வாய்ப்புகள் கிடைக்காத நிலையில், சொந்த தயாரிப்பிலேயே சமந்தா தொடர்ந்து நடிக்கப் போகிறார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
